tamilnadu

img

‘கிக்’ தொழிலாளர்களுக்கு தனிச் சட்டம் இயற்றுக!

உழைப்பைச் செலுத்துபவர் தொழிலாளி இல்லையா?
‘செயலி’ மூலமாகவே சுரண்டும் ‘கண்ணுக்குத் தெரியாத’ முதலாளிகள்

தமிழக முதல்வருக்கு அ.சவுந்தரராசன் வேண்டுகோள்

சென்னை,ஆக.17- கிக்(GIG) தொழிலாளர்களுக்கு தமிழக அரசு தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்று சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் வேண்டு கோள் விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு: தமிழ்நாடு முதல்வர் தனது சுதந்திர தின உரையில் உணவு மற்றும் பல சரக்குகள் விநியோகிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள சேவை வழங்குநர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும் என்று அறி வித்திருக்கிறார்.எந்தவிதமான பாது காப்பும் அற்ற முறையில் பணியாற் றும் அந்த கிக் தொழிலாளர்களுக்கு இது ஒரு முன்னேற்றகரமான நிவார ணம் என்ற வகையில் சிஐடியு மகிழ்ச்சி யோடு வரவேற்கிறது. எனினும் அந்தத் தொழிலாளர் களை தொழிலாளர்கள் என்று வகைப்படுத்த வேண்டும் என்பது தான் அடிப்படைப் பிரச்சனை. இலட்சக் கணக்கான பேர் வேலைசெய்யும் இந்தத் தொழிலில் முதலாளி- தொழி லாளி உறவே இல்லை என்று முத லாளிகள் வாதிடுகிறார்கள்.எந்த அடிப்படை நியாயமும் இந்த வாதத்தில் இல்லை. 

ஒரு தொழிலாளி உழைப்பை செலுத்தி செய்கிற பணியால் லாபம் அடைகிறவர் எவரோ அவர்தான் அந்த தொழிலாளியின் முதலாளி. ஸ்விக்கி, ஜொமாட்டோ, ஓலா, உபேர் போன்ற எந்தவகை நிறுவனமும் தன்னிடம் வேலை செய்பவர்களைத் தொழிலாளர்கள் அல்ல என்று சொல்ல முடியாது.  இந்தத் தொழிலாளர்களுக்கு இப்போது எந்த சட்டமும் பொருந் தாது. நியமன உத்தரவு இல்லை; நிரந்தரம் என்பது இல்லை: ஊதியத்து டன்  வாரவிடுமுறை இல்லை; வேலை  நேர வரையறை இல்லை; குறைந்த பட்ச ஊதிய உத்தரவாதமில்லை; வைப்பு நிதி, மருத்துவம் போன்ற எந்த சமூகப்பாதுகாப்பும் இல்லை. இன்றைய நிலையிலேயே இந்தத் தொழிலாளர்களுக்கு கடைகள் மற்றும் நிறுவனச் சட்டம் பொருந் தும். அல்லது தனிச் சட்டம் ஒன்று  இயற்றப்பட வேண்டும். பிளாட் பார்ம் தொழிலாளர்கள் என்று அந்தத் தொழிலாளர்களை கொத்தடிமைகள் போல் நடத்துவதும், நினைத்த மாத்திரத்தில் ‘ஆப்’ பை (செயலி) தடை செய்து துரத்துவதும், தன்தரப்பை சொல்வதற்கு வாய்ப்பை மறுப்பதும் ஏற்கத்தக்கதல்ல என்ப தோடு, இயற்கை நீதிக்கும் விரோத மானதாகும். எனவே முதல்வர், இப்போது அந்தத் தொழிலாளர்களின் நிலைக் காக கருணையோடு எடுத்துள்ள நல வாரிய முடிவோடு நிற்காமல், அவர் களுக்கு  சட்டப்பாதுகாப்பும், தொழி லாளி என்ற உரிமையும் கிடைக்கத் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள் ளார்.