திண்டுக்கல், டிச.5- போக்சோ வழக்குகளை விரை ந்து விசாரித்து முடித்து தீர்ப்பளிக்க நீதிமன்றங்கள் முன்வர வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கத்தின் மாநில சிறப்பு மாநாடு வலியுறுத்தி யுள்ளது. கல்வி நிலையங்களில் தொடரும் மாணவிகள் மீதான பாலியல் வன் முறையை தடுத்திட வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் மாநில சிறப்பு மாநாடு டிசம்பர் 5 ஞாயிறன்று திண்டுக்கல்லில் நடை பெற்றது. மாநாட்டின் துவக்க நிகழ்ச்சி யாக பெண்ணுரிமைக்காக போரா டிய தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அங்கிருந்து மாநாட்டு அரங்கம் வரை மாணவி கள் ஊர்வலமாகச் சென்றனர்.
சிறப்பு மாநாட்டுக்கு மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன் தலைமை வகித்தார். திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் ஏ.கே.முகேஷ் வர வேற்றுப் பேசினார். திண்டுக்கல் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப் பினர் கே.பாலபாரதி துவக்கவுரை யாற்றினார். சங்கத்தின் அகில இந்திய மாணவிகள் உபகுழு அமைப் பாளர் தீப்ஷிதா தர், பெண்ணிய குழந்தைகள் உரிமை செயல்பாட்டா ளரும், வழக்கறிஞருமான பி.எஸ். அஜிதா, பாரதிதாசன் பல்கலைக் கழக மகளிரியல் துறை பேராசிரி யர் எஸ்.சுபா ஆகியோர் கருத்துரை யாற்றினர். மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் நிறைவுரை யாற்றினார். மாநில மாணவிகள் உபகுழு கன்வீனர் சத்யா, சங்கத்தின் நிர்வாகிகள் ம.கண்ணன், நிருபன் சக்கரவர்த்தி, ஆறு.பிரகாஷ், ஜி. அரவிந்தசாமி, இரா.ஜான்சிராணி, பிருந்தா, எம்.காவியா, எம்.தேன் மொழி ஆகியோர் கலந்துகொண் டனர். டி.செல்வமுருகன் நன்றி கூறினார்.
தீர்மானங்கள்
மாநாட்டில் பல்வேறு தீர்மான ங்கள் நிறைவேற்றப்பட்டன. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் குற்றங் களை போக்சோ சட்டத்தில் பதிவு செய்வது, பதிவு செய்யப்பட்ட வழக்குகளை உடனடியாக விசாரி த்து 3 மாதத்திற்குள் தண்டனை வழங்குவதை உறுதிப்படுத்த நீதி மன்றங்கள் முன்வர வேண்டும். தமி ழக அரசு குழந்தைகள் பாதுகாப்பு கொள்கையை உருவாக்கி அதை பள்ளிகளில் நடைமுறைப்படுத்து வதோடு மட்டுமல்லாமல் குழந்தை கள் வசிக்கும் பகுதிகளுக்கும் விரிவு படுத்த வேண்டும். அனைத்து கல்வி வளாகங்களிலும் ஐ.சி.சி. குழு அமைத்து பாலியல் குற்றங்கள் சம்மந்தமான வழக்குகளை விசா ரிக்கவும் உரிய தண்டனை பெற்றுத் தருவதையும் உறுதிப்படுத்த வேண்டும். பாலியல் குற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இருந்தும், சில ஆசிரியர்களால் இந்த குற்றங்கள் நிகழ்வது அதி கரித்து வருகிறது. எனவே பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான சட்டம் மட்டுமல்லாமல் அவர்களுக்கான உளவியல் ஆலோசனை வகுப்பு களை 3 மாதத்திற்கு ஒரு முறை நடத்த வேண்டும். தமிழகத்தில் 12 போக்சோ நீதி மன்றங்கள்தான் உள்ளன. ஆனால் பதியப்படும் வழக்குகளுக்கு ஏற்ற வகையில் போக்சோ நீதிமன்றங் கள் இல்லாததால் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் போக்சோ சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
(நநி)