tamilnadu

img

கல்வி நிறுவனங்களில் தீண்டாமையை ஒழிக்க யுஜிசி வழிகாட்டுதலை அமல்படுத்த வேண்டும்

சென்னை, செப். 3 - கல்வி நிறுவனங்களில் நிலவும் தீண்டாமையை ஒழிக்க, பல்கலைக் கழக மானியக்குழுவின் வழி காட்டுதலை அமல்படுத்த வேண்டும் என்று யுஜிசி முன்னாள் தலைவர் சுக தேவ் தோரட் வலியுறுத்தி னார்.  ‘ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் நிலவும் சாதிய பாகுபாடு மற்றும் இடஒதுக்கீடு மீறல்கள்’ எனும் தலைப்பில் ஞாயிறன்று (செப்.3) சென்னையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கருத்தரங்கை நடத்தியது. இதனை தொடங்கி வைத்து அவர் பேசியதன் சுருக்கம் வரு மாறு:

ஒன்றிய உயர்கல்வி நிலையங்களில் சாதிய ஒடுக்குமுறை உள்ளது. மாணவர்களுக்கு இடை யிலும், ஆசிரியர் - மாண வர்களுக்கு இடையிலும், கல்வி நிலைய சூழலாலும் ஒடுக்குமுறை நிலவுகிறது. சமூகத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வு, ஒடுக்குமுறை, கல்வி  நிலையங்களிலும் பிரதி பலிக்கிறது. இதற்கு அடிப் படையான காரணம் வருணா சிரமத்தை போதிக்கும் மநுஸ்மிருதிதான். அரசிய லமைப்பு சட்டம் சமத்து வத்தை வலியுறுத்தினாலும், சட்டங்களை கொண்டு வந் தாலும் சாதிய ஒடுக்குமுறை தொடர்கிறது. இவ்வளவு காலத்திற்கு பிறகும் தலித் மற்றும் பழங்குடியின மக்கள் தனித்து வைக்கப் படுகின்றனர். சமூக வழக்கம், நியாயம், பாரம்பரி யம் போன்ற சிந்தனைகள் மாணவர்களிடத்தில் ஆதிக் கம் செலுத்துகிறது. கல்வி வளாக விடுதி களில் மாணவர்களுக்கு அறைகள் ஒதுக்கப்படு கிறது.

ஆனால், சக மாண வர்களின் சாதியை கண்ட றிந்து, வார்த்தை, செயல்க ளால் அவமதித்து தனிமைப் படுத்துகின்றனர். இதனால் அங்கு நிலவும் சூழல், அவர்களை தனிமைப் படுத்தி வைக்கிறது. இந்த ஒடுக்குமுறையால் உள வியல் ரீதியாக பாதிக்கப் பட்டு மாணவர்கள் தற் கொலைக்கு தள்ளப்படு கின்றனர். இதனை தடுக்க பல்கலைக் கழக மானியக் குழு 2012ல் வழிகாட்டு நெறி முறைகளை வெளியிட்டது. அதை பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் அமல்படுத்து வதில்லை. அதன்படி, கல்வி நிறுவனங்களில் சம வாய்ப்பு பிரிவு அமைத்தல், தீண் டாமை ஒழிப்பு அலுவலரை நியமித்தல் போன்றவற்றை செய்ய வேண்டும். இதன்  மூலம் தீண்டாமை புகார்கள் மீது விசாரணை நடத்தி தண்டனை வழங்கலாம். கல்லூரிகளில் செயல்படும் எஸ்சி, எஸ்டி பிரிவு மூலம்  நியமனம், சேர்க்கை போன்ற வற்றில் இடஒதுக்கீட்டை மட்டுமே உறுதி செய்ய முடியும். சாதிய ஒடுக்கு முறையால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மீண்டு வர ஆலோசகர்களை நியமிக்க வேண்டும். இது போன்ற செயல்கள் மூலமாகவே கல்வி நிறுவனங்களில் தீண்டாமையை ஒழிக்க முடியும்.  இவ்வாறு அவர் பேசினார்.

கே.சாமுவேல்ராஜ்

முன்னதாக நிகழ்விற்கு தலைமை தாங்கி பேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் கே.சாமு வேல்ராஜ், இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் சாதி அழுத்தத்தின் காரண மாக உயர்கல்வி நிறுவனங் களில் மட்டும் 61 மாண வர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 19 ஆயிரம் பட்டியலின மாணவர்கள் கல்வி நிலையங்களை விட்டு விரட்டப்பட்டுள்ளனர். சாதிய பாகுபாட்டை கடை பிடிப்பவர்கள் 100 விழுக் காட்டினர் படித்தவர்களாக உள்ளனர். ஆதிக்க சமூகத் தினர் வேலை வாய்ப்பு உள்ளிட்டவைகளை தக்க வைத்துக் கொள்ள சாதியை கடைபிடிக்கிறார்கள்.  கல்வி, ஒரு பிரிவின ருக்கு சாதியை பலப்படுத்த உதவுகிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விழிப்புணர்வை தருகிறது என்றார்.  இந்நிகழ்வில் தலித்  சோஷன் முக்தி மஞ்ச் சுபாஷினி அலி, முன்னணி யின் சிறப்பு தலைவர் எஸ்.கே.மகேந்திரன், மாநிலத் தலைவர் த.செல்லக் கண்ணு, பேரா.வெங்கடேஷ் ஆத்ரேயா, முனைவர் அருண்கண்ணன், இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜி.அரவி ந்த்சாமி, புதுச்சேரி பிரதேச செயலாளர் சி.பிரவீன் குமார், அம்பேத்கர் பெரி யார் வாசகர் வட்ட உறுப்பினர் கே.சுவாமி நாதன், சி.அஸ்வின்தேவ் (சிந்தாபார்), சென்னை ஐஐடி எஸ்சி/எஸ்டி ஊழியர் சங்க தலைவர் எம்.ரமணி, முன்னணியின் நிர்வாகிகள் பி.சுகந்தி, வேணி, ச.லெனின், ஜி.ஆனந்த் உள்ளிட்டோர் பேசினர். நிகழ்வை முன்னணியின்  துணைப்பொது்செயலாளர் கே.சுவாமிநாதன் ஒருங்கிணைத்தார்.