tamilnadu

img

மின் ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

மின் ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, ஜுன் 21-  மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில், மயிலாடுதுறை மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு, திட்டச் செயலாளர் எம். கலைச்செல்வன் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.            ஆரம்ப நிலை காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஊதிய உயர்வு ஒப்பந்தம் காணும் வரை இடைக்கால நிவாரணமாக ரூ.5,000 வழங்க வேண்டும்..  ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும். அவுட் சோர்சிங் -ஐ புகுத்தக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.