tamilnadu

img

291 மாணவர்களுக்கு கிடைத்த ரூ.18.51 கோடி

மதுரை, நவ.13 - மதுரையில் நவம்பர் 13 ஞாயிறன்று நடை பெற்ற கல்விக்கடன் திருவிழாவில் 1550  மாணவர்கள் பங்கேற்றனர். 291 மாணவர் களுக்கு  18.51 கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்கப்பட்டது என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.  மதுரை மாவட்ட நிர்வாகமும் வங்கிகள் நிர்வாகமும் இணைந்து அமெரிக்கன் கல்லூரி யில், உயர்கல்வி பயிலும் மதுரை மாவட்ட மாண வர்களுக்கான கல்விக்கடன் முகாம் நடை பெற்றது. இம்முகாமில்  1500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் உயர்கல்விக்கடன் பெறு வதற்கு விண்ணப்பிக்க வருகை தந்திருந்தனர். இவர்களில் தகுதியான 1002 நபர்களுக்கு கல்விக்கடன் பெறுவதற்கான உரிய தகுதிகள் அடிப்படையில் பதிவுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் இணையதளம் வழியாக 900 மாணவர்கள் கல்விக்கடன் வேண்டி விண்ணப்பித்துள்ளனர். இம்முகாமில் கல்விக்கடன் பெற விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு கீழ்க்கண்ட  வங்கிகள் வாரியாக...

1. கனரா வங்கி - 102 மாணவர்கள் - 7.28 கோடி  ரூபாய்; 2. பாரத ஸ்டேட் வங்கி - 86 மாணவர்கள் -  2.61 கோடி ரூபாய்; 3. இந்தியன் வங்கி - 30 மாண வர்கள் - 1.51 கோடி ரூபாய்; 4. இந்திய ஓவர்சீஸ்  வங்கி - 24 மாணவர்கள் - 1.31 கோடி ரூபாய்;  5. யூனியன் வங்கி - 21 மாணவர்கள் - 1.08 கோடி  ரூபாய்; 6. சென்ட்ரல் வங்கி - 3 மாணவர்கள் - 1.47 கோடி ரூபாய்; 7. தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி - 7 மாணவர்கள் - 1.80 கோடி; 8. பாங்க் ஆப் பரோடா - 18 மாணவர்கள் - 1.03 கோடி ரூபாய்;  மொத்தமாக 291 மாணவர்களுக்கு 18.51 கோடி ரூபாய் முகாமில் மாணவர்களுக்கு வழங்கப் பட்டுள்ளது.

கல்விக்கடன் உதவி பெற்றுள்ள மாணவர்கள்  கல்வியின் மூலம் தங்களது வாழ்வை மேம்படுத்தி வளம்பெற இம்முகாம் நடைபெற வேண்டி உழைத்த, முயற்சித்த அனைவரது சார்பி லும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.  இம்மாபெரும் கல்விக்கடன் முகாமில் வணிகவரி- பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி-மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பங்கெடுத்து நிகழ்வினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினர். மாவட்ட ஆட்சியர்   அனீஷ் சேகர்  தலைமை வகித்தார். சு.வெங்க டேசன் எம்.பி., கூடுதல் ஆட்சியர் சரவணன் மற்றும் மாநகராட்சி ஆணையர்  சிம்ரஞ்ஜித் சிங் கஹ்லோன்,  மேயர் இந்திராணி பொன்வசந்த், துணைமேயர் டி.நாகராஜன், சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன் மற்றும் அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் ஆகியோர் உரையாற்றினர். 

கூடுதல் ஆட்சியர் சரவணன், செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் சாலி தளபதி,  லீடு பேங்க் மேலாளர் சங்கரபாண்டியன், மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், புறநகர் மாவட்டச்  செயலாளர் கே.ராஜேந்திரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் என்.பாண்டி, இரா.விஜயராஜன், எஸ்.பாலா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கல்விக் கடன் பெற வந்த மாணவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து, வழிகாட்டி களாக அமெரிக்கன் கல்லூரி என்.எஸ்.எஸ்.மாணவர்கள் செயல்பட்டனர். இந்திய  ஜனநாயக வாலிபர்  சங்கத்தின்  மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக் மற்றும் மதுரை மாநகர் - புறநகர் மாவட்டத் தலைவர்கள், இந்திய மாணவர் சங்கத் தலைவர்கள், வங்கி அதிகாரிகளுக்கும் கடன்பெற வந்த மாணவர்களுக்கும் இணைப்புப் பாலமாக செயல்பட்டனர்.