tamilnadu

அரசியல் சட்டத்தை எடப்பாடி பழனிச்சாமி வாசிக்க வேண்டும்

கோயம்புத்தூர். பிப். 15 –  கோவை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் இரண்டு நாள் பிரச்சார இயக்கம் மேற்கொண்டுள்ளார். செவ் வாயன்று இருகூர் பேரூராட்சியில் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் எஸ்.ஸ்டாலின்குமார், ராஜேஸ்வரி மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர் களுக்கு ஆதரவு கேட்டு இருகூர்  சந்தை மைதானத்தில் உரையாற்றி னார்.  அப்போது அவர் பேசுகையில், 1992 ஆம் ஆண்டுதான் புதிய  பஞ்சாயத்து நகர்ப்புற உள்ளாட்சி சட்டம் நிறைவேறியது. நாடாளு மன்றத்தில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை கட்டாயம் உள்ளாட்சி களுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என அரசியல் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது.

ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் ஐந்தாண்டு காலமாக உள்ளாட்சி தேர்தலை நடத் தாமல் உள்ளாட்சிகளில் அதிகாரிகள் தான் அதிகாரம் செலுத்தி வந்தனர். சட்டமன்ற, நாடாளுமன்றத்திற்கு எப்படி ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறதோ அதேபோன்று உள்ளாட்சிகளுக்கும் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தி உள்ளாட்சி பிரதிநிதி களை தேர்ந்தெடுக்கப்படவேண்டும்.  ஆனால்,  இந்த ஜனநாயக கடமை யை கடந்த அதிமுக ஆட்சி நிறை வேற்றவில்லை. இதைப்பற்றி பேசு வதற்கு எடப்பாடி பழனிச்சாமி தயா ரில்லை. இதனைவிடுத்து ஒன்றிய  அரசு முன்மொழிகிற ஒரே நாடு, ஒரே தேர்தலை ஆதரித்துபேசு கிறார். 2024ல் திமுக அரசு கலைக்கப் படுமாம், இவர்கள் ஆட்சியை பிடிப்பார்கள் என பேசுகிறார். எடப்பாடி பழனிச்சாமியை  நாங்கள்  கேட்டுக்கொள்வதெல்லாம் நீங்கள்  முதலில் அரசியலமைப்பு சட்டத்தை  படித்திருக்கிறீர்களா? அது குறித்து உங்களுக்கு ஏதாவது தெரியுமா? முத லில் அரசியலமைப்பு சட்டத்தை படிக்க வேண்டுகிறேன்.  சட்டமன்றத் திற்கு ஒரு கட்சி தேர்ந்தெடுக்கப்பட்டு அதிகாரத்திற்கு வந்தால் அது ஐந்தா ண்டு காலம் முழுமையாக அதி காரத்தை தொடரலாம். நாடாளு மன்ற தேர்தலில் ஒரு கட்சியோ கூட்ட ணியோ வெற்றிபெற்று அதிகாரத் திற்கு வந்தால் ஐந்தாண்டுகள் ஆட்சி யில் தொடரலாம். இதுகுறித்தெல் லாம் தெரியாமல் 2024 ஆம் ஆண்டு திமுக ஆட்சி கலைக்கப்படும் என் கிறார்.

 அப்படியானால் தற்போது  உ.பி. உள்ளிட்ட ஐந்து மாநிலங் களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. உங்கள் கூற்றுப்படி இன்னும் இரண்டு ஆண்டுகளில் அந்த ஆட்சிகள் கலைக்கப்படுமா?  ஒன்றிய அரசு தில்லியில் இருக்கும், மாநில அரசு சென்னை யில் இருக்கும். ஆனால், இந்த ‘லோக்கல்பாடி’ என்கிற உள்ளாட்சி அமைப்பு நேரிடையாக மக்களுடன் இருக்கும். மக்கள் தூங்கிவிட்டு கண்விழித்தால் உள்ளாட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிதான் முன்னால் நிற்க வேண்டும். இத்த கைய முக்கியத்துவம் வாய்ந்த உள்ளாட்சிக்கு தேர்தல் நடத்தாமல் அதிகாரிகளின் துணையோடு ஊழல் மலிந்த நிர்வாகமாக மாற்றியது அதிமுக. இவர்களிடம் இருந்து உள்ளாட்சிகளை பாதுகாக்க திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பா ளர்களுக்கு பெருவாரியான வாக்கு களை அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறேன். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, இந்த பிரச்சார கூட்டத்தில் திமுக தலைமைக்குழு உறுப்பினர் சந்திரன், நகர செய லாளர் மணி, மார்க்சிஸ்ட் கட்சியின் யு.கே.சிவஞானம், கே.பழனிச்சாமி, சண்முகசுந்தரம், விஜயராகவன், காங்கிரஸ் கட்சியின் பொன்னுசாமி, விடுதலை சிறுத்தைகள் சந்திரசேக ரன், மதிமுக சந்திரசேகர் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். இத னைத்தொடர்ந்து சூலூர் பேரூராட்சி மற்றும் கிணத்துக்கடவு, பொள்ளா ச்சி, ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளில் ஜி.ராமகிருஷ்ணன் பிரச்சாரம் மேற்கொண்டார்.