தில்லி, பீகாரில் நிலநடுக்கம்
தில்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் திங்கள்கிழமை அதிகாலை 5.36 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவா னது. நிலப்பரப்பில் இருந்து 5 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித் துள்ளது.
இந்த மிதமான நிலநடுக்கத் தால் பெரியளவில் சேதம் ஏதும் ஏற்பட வில்லை என்றாலும், கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு தெருக்களில் குவிந்தனர். சீதாராம் பஜார், தௌலா குவானின் ஜீல் பார்க், புத்த விஹார், மேற்கு தில்லி, நேரு நகர் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் வீடுகளுக்குள் செல்ல அஞ்சியதால் அப்பகுதி கள் இயல்பு நிலையை இழந்தன.
தில்லி மட்டுமின்றி தில்லி எல்லையோர நகர்ப் பகுதிகளான உத்தரப்பிரதேசத்தின் நொய்டா, கிரேட்டர் நொய்டா உள்ளிட்ட பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பீகார் மாநிலம் சிவானில் திங்கள் கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற் பட்டது. தில்லியைப் போல சிவானிலும் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவா னதாக தேசிய நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
ஆசிரியர்களை மீண்டும் ஆபாசமாக வர்ணிக்கும் ராஜஸ்தான் பாஜக அரசு
பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநி லத்தில் பள்ளிகளில் பணியாற் றும் ஆசிரியர்கள் அனைவ ரும் கட்டாயம் ஒரே மாதிரியான ஆடை அணிந்துதான் கல்வி நிறுவனங்களுக்கு வருகை தர வேண்டுமென்ற உத்தரவை பிறப்பிக்க அம்மாநில பள்ளிக்கல்வித் துறை தீர்மானித்துள்ளது. இதற்கு கார ணம் என்ற பெயரில் ஆசிரியர்களை மீண்டும் ஆபாசமாக வர்ணித்துள்ளது அம்மாநில பாஜக அரசு.
இதுதொடர்பாக ராஜஸ்தான் பாஜக அரசு விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படும் செய்தி தொகுப்பில்,”ஆசிரியர்கள் பலர் தங்கள் உடல் அங்கங்கள் வெளியே தெரியும் படி ஆடை அணிந்து வருகின்றனர். இது சிறுவர், சிறுமிகள் மத்தியில் நன்மதிப்பு களை விளைவிக்காது. அதனால் தான் ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் ஒரே மாதிரியான ஆடை அணிந்துதான் கல்வி நிறுவனங்களுக்கு வருகை தர வேண்டு மென்ற உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது” என அதில் கூறப்பட்டுள்ளது.
தில்லி முதலமைச்சரை நியமிக்க பாஜகவிற்கு ஆள் கிடைக்கவில்லை
ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
தில்லி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவு பிப்ர வரி 8ஆம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவில் 27 ஆண்டு களுக்கு பிறகு பாஜக ஆட்சியை கைப் பற்றியது. தேர்தல் முடிவு வெளியாகி 10 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், தில்லி முதலமைச்சரை நியமிக்க முடி யாமல் பாஜக திணறி வருகிறது. திங்களன்று பிரதமர் மோடி தலை மையில் தில்லி பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப் பட்டு இருந்தது. ஆனால் திடீரென பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில்,”தில்லி முதல மைச்சரை நியமிக்க பாஜகவிற்கு ஆள் கிடைக்கவில்லை” என ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக ஆம் ஆத்மி மூத்த தலைவரும், தில்லி முன்னாள் முதலமைச்சருமான அதிஷி கூறுகையில்,”தேர்தல் முடிவுகள் அறி விக்கப்பட்டு 10 நாட்கள் ஆகின்றன. பிப்ரவரி 9ஆம் தேதி பாஜக தனது முத லமைச்சரையும், அமைச்சரவையையும் அறிவித்து உடனடியாக வளர்ச்சிப் பணி களைத் தொடங்கும் என்று தில்லி மக்கள் நினைத்தார்கள். ஆனால் தில்லியை நிர் வகிக்க பாஜகவிற்கு எந்த முகமும் இல்லை என்பது இப்போது தெளிவாகி யுள்ளது” என அவர் கூறினார்.