கம்பம் -மெட்டு மலைப்பாதையில் ஜீப் கவிழ்ந்து டிரைவர் பலி 10 பேர் காயம்
தேனி, மே 28- கம்பம் -மெட்டு மலைப்பாதையில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுனர் பலியானார். காமயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கம்பம் புது பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் ரோஷன் பாரூக் (65). இவர் கம்பத்திலிருந்து கேரள மாநிலம் நெடுங்கண்டம், கட்டப்பனை உள்ளிட்ட பகுதி களுக்கு பயணிகளை ஜீப்பில் ஏற்றி செல்வது வழக்கம். இந்நிலையில், செவ்வாயன்று மாலை உத்தமபாளை யம் அருகேயுள்ள பல்லவராயன் பட்டியைச் சேர்ந்த தங்கம்மாள், மணிகண்டன், போடி அருகே உள்ள சில மலையைச் சேர்ந்த லட்சுமி உள்ளிட்ட 11 பயணிகளை ஜீப்பில் ஏற்றி கொண்டு கம்பத்திற்கு வந்தார். அப்போது மலைப்பாதையில் உள்ள 5 வது கொண்டை ஊசி வளைவு அருகே அரசு பேருந்தை விலகிச் சென்ற போது ரோஷன்பாரூக் ஓட்டி சென்ற ஜீப் கட்டுப்பாட்டை இழந்து பாறையில் மோதி தலை குப்புற சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காயமடைந்து கிடந்தவர்களை அவ்வழியாக வந்தவர்கள் மீட்டு கம்பம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டிரைவர் உட்பட 11 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் டிரைவர் ரோஷன்பாரூக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அரசுப்பேருந்து மோதிய விபத்தில் இருவர் பலி
மதுரை, மே 28- மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி அருகே உள்ள பாப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த முனியாண்டி மகன் கார்த்திக்(22). அதே ஊரைச் சேர்ந்த நமச்சிவாயம் மகன் ஹேமந்தராஜ்(19). இருவரும் தே.கல்லுப்பட்டியில் இரு சக்கர வாகன பழுதுநீக்குபவர்களாக பணிபுரிந்து வரு கின்றனர். இந்நிலையில் திங்களன்று மாலை இருவரும் இருசக்கர வாகனத்தில், பாப்பநாயக்கன்பட்டியில் இருந்து தே.கல்லுப்பட்டிக்கு சென்றனர். இந்நிலையில் சோலைப்பட்டி அருகே செல்லும்போது, தென்காசியில் இருந்து சென்னை செல்லும் அரசு விரைவுப்பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்து வர்கள், ஏற்கெனவே உயிரிழந்ததாகத் தெரிவித்தனர். இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய அரசு விரைவுப் பேருந்து ஓட்டுநர் தென்காசி மாவட்டம் வி.கே.புதூரைச் சேர்ந்த குழந்தை யேசு(31) மீது தே.கல்லுப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை முல்லைப்பெரியாறு நீர்மட்டம் கிடுகிடு உயர்வு
தேனி, மே 28- மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரண மாக நீர்வரத்து அதிகரித்து முல்லைப் பெரியாறு நீர்மட்டம் 4 நாட்களில் 7 அடி உயர்ந்துள்ளது. கேரளாவில் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக 10 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டத்திலும் கனமழை பெய்து முல்லைப் பெரியாறு அணைக்கு கணிசமாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கடந்த 23 ஆம் தேதி 114 அடியாக இருந்த நீர்மட்டம் புதன்கிழமை காலை நிலவரப்படி 121.60 அடி யாக உயர்ந்துள்ளது .7,735 கன அடி நீர்வரத்து உள்ளது. 100 கன அடி திறக்கப்படுகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேலும் நீர்மட்டம் உயரும். வைகை அணையின் நீர்மட்டம் 53.22 அடியாக உள்ளது. நீர்வரத்து 507 கன அடி. குடிநீருக்கு 72 கன அடி திறக்கப்படுகிறது. பெரியாறு 73, தேக்கடி 32, சண்முகா நதி அணை 5.8, கூடலூர் 9.6, உத்தமபாளையம் 4.6, போடி 2.2, சோத்துப் பாறை 1 மி.மீ. மழை அளவு பதிவானது.
அரசு பேருந்து டிராக்டர் மீது மோதிய விபத்தில் ஒருவர் பலி
மதுரை, மே 28- மதுரை மாவட்டம் திருமங்கலம் - விருதுநகர் நான்கு ழிச்சாலையில் புதனன்று அதிகாலை 2.30 மணி அளவில் திருச்சியில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு நாகர்கோவிலுக்கு அரசு அதிவிரைவு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் சிவகாசி திருத்தங்கல்லைச் சேர்ந்த மாடசாமி மற்றும் பாலமுருகன் இருவரும் புல் அறுக்கும் புதிய டிராக்டர் வண்டியை திருப்பூரிலிருந்து வாங்கிக் கொண்டு சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டிருந்த அரசு அதிவிரைவு பேருந்து டிராக்டரின் பின்பக்கம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சக்கரத்தில் மாட்டிக் கொண்ட மாடசாமி (36) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாலமுருகன் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதில் பய ணம் செய்த பயணிகளுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது. பின்னர் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் டிராக்டர் மீது ஏறி நின்ற பேருந்தை கிரேன் இயந்திரம் கொண்டு மீட்டு அங்கிருந்து அப்புறப்படுத்தினார்.
‘சாதிய படுகொலையான தலித் குடும்பங்களுக்கு முழுமையான அரசு நிவாரணம் வழங்கப்படவில்லை’
மதுரை, மே 28- தலித் படுகொலை குற்றங்களில் பாதிக்கப்பட்டோருக்கு இன்றளவும் முழுமையான நிவாரணம் வழங்கப்பட வில்லை என்று ஆதி திராவிடர் நலத் துறை மீது கடும் குற்றச்சாட்டு வைக் கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தலித் விடுதலை இயக்கம் சார்பில் தமிழ்நாடு அரசு முதல மைச்சருக்கு மனு ஒன்று அனுப்பப் பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: 2014 முதல் 2016 வரையிலான 18 சாதி அடிப்படையிலான படுகொலை வழக்குகளில் பாதிக்கப்பட்ட பட்டிய லின குடும்பங்களுக்கு, எஸ்சி/எஸ்டி (வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம்) 1989 மற்றும் 2015 திருத்தங்களின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய இரண்டாம் கட்ட இழப்பீடு இன்று வரை வழங்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து 2017ஆம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடுக்கப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க தவறிய நிலை யில், கடந்த 7.2.2024 அன்று, ஆதிதிரா விடர் நலத்துறை இயக்குநர் ஆனந்தன், நீதிமன்றத்தில் தாக்கல் செய்த எதிர்மனுவில், சட்டவிரோதமாகவும், வன்கொடுமைகள் தடுப்புச் சட்டவிதி முறைகளுக்கு எதிராகவும் இருப்பதாக கடுமையாக எச்சரித்திருந்தார். இது அரசுத் துறைகளின் திட்ட மிட்ட அலட்சியத்தைக் காட்டும் முக்கிய சான்றாகவும், பாதிக்கப்பட்டோரின் உரி மைகளை மறுக்கும் நடவடிக்கையாக வும் கருதப்படுகின்றது. ஆனந்தன் தனது சட்டப்பூர்வமான பொறுப்புகளை தவிர்த்ததால், எஸ்சி/எஸ்டி பிரிவு 4-ன் கீழ் அவர்மீது குற்றப் பதிவு செய்ய வேண்டும் என இயக்கம் வலியுறுத்தி யுள்ளது. முக்கிய கோரிக்கைகள் பாதிக்கப்பட்ட 18 குடும்பங்களுக்கு உடனடி இரண்டாம் கட்ட இழப்பீட்டு நிவாரணம் வழங்கப்பட வேண்டும். ஆனந்தன் ஐஏஎஸ் மீது சட்டப்படி நட வடிக்கை எடுக்க வேண்டும். நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட எதிர்மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசும், சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் ஆணையங்களும் உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டும் என தலித் விடுதலை இயக்கம் வலியுறுத்துகிறது.
சின்னமனூர் அருகே கார் டயர் வெடித்து விபத்து: தாய், மகன் உயிரிழப்பு
தேனி, மே 28- சின்னமனூர் அருகே டயர் வெடித்து சொகுசு கார் நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தாய், மகன் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள். மதுரையில் ஆயுதப்படை பிரிவில் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வரு பவர் வெள்ளை பாண்டி. இவரின் மனைவி ஜெயா, மகன் கௌதம் மற்றும் மகள் அபர்ணா ஆகிய மூவரும் சேலத்தில் உள்ள ஒரு மருத்துவ மனைக்கு சென்று விட்டு, தேனி மாவட் டம் உத்தமபாளையத்தில் உள்ள மனைவியின் தாயார் வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். காரை ஜெயாவின் உறவினரான அருண் என்ப வர் ஓட்டி வந்துள்ளார். இவர்களுடன் கார் ஓட்டுநர் அருணின் தாயார் தன லட்சுமியும் வந்துள்ளார். ஐந்து பேர்களுடன் சின்னமனூர் பைபாஸ் சாலை வழியாக உத்தம பாளையம் நோக்கி தேசிய நெடுஞ் சாலையில் கார் சென்று கொண்டிருந்த போது துர்க்கை அம்மன் கோவில் அருகே காரின் டயர் வெடித்ததில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகில் உள்ள பள்ளத்தில் உருண்டு விபத் துக்குள்ளானது. விபத்தில் சார்பு ஆய்வாளரின் மனைவி ஜெயா சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பல னின்றி உயிரிழந்தார். மேலும் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவரது மகன் கௌதம், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கார் விபத்தில் படுகாயம டைந்த மற்ற மூன்று பேரும் சின்ன மனூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரு கின்றனர்.