tamilnadu

img

மின்சாரப் பேருந்துகளை தனியார்மயமாக்காதீர்!

மின்சாரப் பேருந்துகளை தனியார்மயமாக்காதீர்!

சென்னையில்  பிரச்சார இயக்கம் தொடங்கியது

சென்னை, மே 11 - தமிழ்நாடு அரசு மின்சாரப் பேருந்துகளை (இ-பஸ்) கொள்முதல் செய்து தனியார் மூலம்  இயக்க உள்ளது. இந்த தனியார்மய நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரி வித்து ஞாயிறன்று (மே 11) மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் தொடங்கியது. உலக வங்கி நிதி உதவியுடன் தமிழக அரசு (சென்னை) மாநகர போக்குவரத்துக் கழகத்தையும், பேருந்து இயக்கங்களிலும் பல்வேறு  மாற்றங்களை செய்ய உள்ளது.  இதன்படி, சென்னை நகரில் 2032ஆம் ஆண்டில் 7 ஆயிரத்து 578 பேருந்து களை இயக்கவும், பயணிப்ப வர்களின் எண்ணிக்கையை 55  லட்சமாக உயர்த்தவும் திட்ட மிடப்பட்டுள்ளது. இதற்காக தற் போது அரசு 1000 மின்சார பேருந்து களை கொள்முதல் செய்ய உள்ளது. இதில் 650 பேருந்துகள் ஜூன் மாதத் தில் இருந்து சென்னை நகரச் சாலை களில் இயக்கப்பட உள்ளன.  தனியாருக்கே லாபம்  மின்சாரப் பேருந்துகளை அரசு கொள்முதல் செய்திருந்தாலும், தனி யார் மூலம் இயக்கப்படும். அதாவது, தனியார் நிறுவனம் ஓட்டுநர், பரா மரிப்பாளரை நியமித்துக் கொள்ளும். ஓட்டுநரை மட்டும் அரசு நியமிக்கும். அந்த ஓட்டுநரும் ஒப்பந்த தொழிலாளியாகவே இருப் பார். வழித்தடத்திற்கு ஏற்ப அரசு கட்டணம் நிர்ணயிக்கும். அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட ஒரு வழித்தடத்தில் அதிகமாக வசூ லானால், கூடுதல் தொகையை அரசு எடுத்துக் கொள்ளும்; குறைவாக வசூ லானால், அந்த தொகையை அரசு  தனியாருக்கு தரும். பறிபோகும் இடஒதுக்கீடு ஒப்பந்த முறையில் பேருந்து களை இயக்குவதால் இட ஒதுக்கீடு பறிபோகும். நிரந்தரப் பணி இருக்காது. அத்துக்கூலிகளாக தொழிலாளர்கள் இருப்பார்கள். குறைந்தபட்ச கூலி சட்டம் போன்ற சட்டச் சலுகைகளும் தொழிலாளர் களுக்கு கிடைக்காது. இதனை தொடர்ந்து படிப்படியாக போக்கு வரத்துக் கழகம் தனியார்மயமாகும். மக்களின் பயண உரிமை பறி போகும். கட்டணமில்லா திட்டங்கள், பயணச் சலுகைகள் பறிக்கப்படும். எனவே, இந்த திட்டத்தை கைவிட்டு, அரசே மின்சார பேருந்துகளை இயக்க வலியுறுத்தி அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கம் (சிஐடியு), இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புக்கள் இணைந்து மே 11 அன்று மக்கள் சந்திப்பு இயக்கத்தை தொடங்கி உள்ளன. சென்னை மாநகரம் முழுவதும் நடைபெறும் இந்த பிரச்சாரம் மே 15  அன்று நிறைவடைகிறது. தென்சென்னை தென்சென்னை மாவட்டம், மயிலாப்பூரில் இந்த பிரச்சாரத்தை மூத்த தொழிற்சங்க தலைவர் ஜி.ராம கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்க தலைவர் ஆர்.துரை  தாம் பரத்திலும்,  வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் தீ.சந்துரு கோயம்பேட்டி லும், மாணவர் சங்க மாவட்டச் செய லாளர் எஸ்.ஆனந்தகுமார் எம்ஜிஆர் நகர் மார்க்கெட்டிலும் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தனர். வடசென்னை  வடசென்னை மாவட்டம் முழு வதும் ஞாயிறன்று (மே 11) 40க்கும் மேற்பட்ட மையங்களில் பிரச்சாரம் நடைபெற்றது. திருவிக நகரில் நடைபெற்ற பிரச்சாரத்தை அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) பொதுச் செயலாளர் கே.ஆறுமுக நயி னார் தொடங்கி வைத்தார். மாதவரம் மூலக்கடையில் சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன் தொடங்கி வைத்தார். இதில் அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வி. தயானந்தம், பொருளாளர் ஏ.ஆர். பாலாஜி, வி.கமலநாதன் (சிஐடியு) உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அம்பத்தூர் அம்பத்தூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எல்.பி.சரவணத்தமிழன், பாபு (போக்குவரத்து) ஆகியோர் தொடங்கி வைத்தனர். திரு வொற்றியூரில் அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.பாக்கியலட்சுமி, இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் அகல்யா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.  மணலி மணலியில் அரசாங்க போக்கு வரத்து ஊழியர் சங்க நிர்வாகி பிர சன்னா, மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.ராணி ஆகியோர் தொடங்கி வைத் தனர், ஆவடியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேள னத்தின் பொருளாளர் சசிகுமார், சிஐ டியு மாவட்ட துணைத் தலைவர் மா.பூபாலன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ராயபுரத்தில் ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் வி.ஜெய கோபால், சென்னை மாவட்ட சாலை யோர சிறுகடை விற்பனையாளர்கள் சங்கத்தின் செயலாளர் டி.வெங்கட் ஆகியோர்  தொடங்கி வைத்தனர்.  மத்தியசென்னை மத்திய சென்னை மாவட்டம் அண்ணாநகர் பகுதியில் அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வி.தயானந்தம் மின்சார பேருந்து சேவை தனியார் மயத்திற்கு எதிரான பிரச்சார இயக்கத்தை தொடங்கி வைத்தார்.