ஆவண நூல் வெளியீடு
தமிழ்நாடு அரசின் நிதித்துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள ‘தமிழர் நிதி நிர்வாகம்: தொன்மையும் தொடர்ச்சியும்’ ஆவண நூலை திங்களன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு, அதற்கான சிறப்பு இணையப் பக்கத்தைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செங்கோட்டையன் நிலைப்பாடு
அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் எடப்பாடி பழனிசாமி நடத்திய நம்பிக்கையில்லாத் தீர்மான ஆலோசனைக் கூட்டத்தை செங்கோட்டையன் புறக்கணித்தார். ஆனால், வாக்கெடுப்பின்போது அதிமுக உறுப்பினர்களுடன் இணைந்து ஆதரவு தெரிவித்தார். கடந்த மாதம் அத்திக் கடவு-அவிநாசி திட்ட விழாவையும், மார்ச் 14 அன்று எடப்பாடி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தையும் செங்கோட்டையன் புறக்கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பட்ஜெட் மீதான விவாதம் தொடக்கம்
சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான பொது விவாதத்தை அதிமுக உறுப்பினர் கே.பி.முனுசாமி தொடங்கி வைத்தார். கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவது குறித்து காரசார விவாதம் நடைபெற்றது. “மடிக்கணினி திட்டத்தை நாங்கள் நிறுத்தவில்லை, அதிமுக ஆட்சியில் நிறுத்தி விட்டார்கள்” என முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்தார்.
முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு இரங்கல்
திங்களன்று காலை சட்டப்பேரவை கூடியதும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.சுந்தரம், மா.கோவிந்தராஜலு, குண சீலன் மற்றும் புகழ்பெற்ற இதய அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் கே.எம்.செரியன் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வழக்குகள் ரத்து
சென்னை: தமிழ்நாடு அமைச்சர்கள் கே.ஆர். பெரிய கருப்பன் மற்றும் எஸ்.எஸ்.சிவசங்கர் மீதான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இஸ்ரோ தலைவர் தகவல்
சென்னை: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன மான, ‘இஸ்ரோ’ தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் நாராயணனுக்கு, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி. வைஷ்ணவா கல்லூரியில் பாராட்டு விழா நடந்தது. அப்போது, தன்னை சந்திக்கும் போதெல்லாம் குலசை ஏவுதளம் குறித்து பிரதமர் மோடி கேட்பதாக கூறினார். மேலும், ஜப்பானும், இந்தியாவும் இணைந்து சந்திரயான்-5 ஆம் திட்டத்தை உரு வாக்க உள்ளதாகவும், சந்திரயான்-5 ஆய்வு திட்டத்திற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள் ளதாகவும் இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.
ஆயுள் தண்டனை வேண்டும்
சென்னை: சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை யில் ஞாயிறன்று சைபர் குற்ற விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது. இதில் பங்கேற்ற தமிழக காவல் துறையின் முன்னாள் டிஜிபி சி.சைலேந்திர பாபு, சைபர் குற்றங்கள் தொடர்பான சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். இந்த குற்றங்களுக்கு சாதாரண தண்டனை சரிவராது. அதற்கு குறைந்தது ஆயுள் தண்டனை இருக்க வேண்டும். மக்க ளுக்கு விழிப்புணர்வு வேண்டும். நமது மக்கள் எளிதாக ஏமாந்து விடுகின்றனர் என்றார்.
கணக்கிட குழு அமைப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏற்பட்ட சேத மதிப்பை கணக்கிட குழு அமைக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மேலாண்மை இயக்குனர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், தீ விபத்தில் சேதமடைந்த பொருட்களின் மொத்த மதிப்பு முழுமையாக கணக்கீடு செய்யப்பட்டு பின்னர் தெரிவிக்கப் படும். ஊழியர்கள் வேறு அனல்மின் நிலையங்களுக்கு பணி யிட மாற்றம் செய்யப்பட உள்ளனர் என்பது அனைத்தும் வதந்திதான். தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 1,2,3-யூனிட்கள் பாதிப்பு அடைந்துள்ளன என்றார்.