tamilnadu

திமுக அணி மாபெரும் வெற்றியை பெறும்

கோவை, பிப்.19– மக்களின் தேவை அறிந்து ஆட்சி செய்கிற திமுக அணி மாபெரும் வெற்றி பெறும் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் நம் பிக்கை தெரிவித்தார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சி 67ஆவது வார்டில் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன், அவ ரது மனைவி வனஜாவுடன் தனது வாக் கினை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் நடைபெறு கிற இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்த லில் மக்களின் பேராதரவை பெற்ற அணி யாக திமுக தலைமையிலான மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணி உள்ளது. இந்த அணி மாநகராட்சி, நகராட்சி மற் றும் பேரூராட்சிகளில் உள்ள அனைத்து பதவிகளையும் கைப்பற்றி மாபெரும் வெற்றியைப் பெறும். இது தமிழக மக்க ளின் மனநிலையில் இருந்து தெரிகிறது.  தமிழ்நாட்டு மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வேன் என்ற தமிழக முதலமைச்சரின் உறுதி மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டுள் ளது. ஆகவே, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அனைத்து அனைத்து இடங்களிலும் மாபெரும் வெற்றியை பெறும் என உறுதியாக நான் நம்புகிறேன் என்றார்.