tamilnadu

நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும்

சென்னை, பிப்.20- நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை அண்ணா அறிவாலயத் தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.20)  நடை பெற்ற திமுக நிர்வாகி அன்பகம் கலை இல்லத்திருமணவிழாவில் அவர்  பேசியதாவது: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேற்று நடந்து முடிந்துள்ளது. தேர்தல் முடிவுகள் செவ்வாயன்று  வர உள்ளது. அது என்ன முடிவு என்பது எல்லோருக்கும் தெரிந்த கதைதான். இந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறப்போகிறோம். அதில்  எந்தவித சந்தேகமும் இல்லை. எனவே  இந்த வெற்றிக்கு இடையே இந்த  திருமண நிகழ்ச்சி நடந்து கொண்டி ருக்கிறது. மணமக்களை வாழ்த்துவ தில் பெருமைபடுகிறேன். இப்போதுகூட தேர்தல் நேரத்தில் காணொலி காட்சியில்தான் நான் பிரசாரத்தை பேசி முடித்தேன். மக்களை சந்திக்க வர தைரியம் இல்லை என்று சிலர் என்னைப் பார்த்து  சொன்னார்கள். எதற்காக நான்  காணொலி காட்சி மூலம் பிரசாரம் செய்தேன் என்றால், கொரோனா கால மாக இருக்கிற காரணத்தால் அந்த  தொற்றுக்காக அரசு சில விதிமுறை களை விதித்து அறிவிப்பு வெளியிட் டது. எனவே நான் நேரடியாக பிரசாரத் துக்கு செல்லவில்லை. அதே நேரத்தில்  நான் பேசிய அனைத்து கூட்டங்களிலும் சொன்னேன். தேர்தல் முடிந்து அதன்  வெற்றிவிழா நடக்கும்போது நிச்சய மாக, உறுதியாக அனைத்து மாவட்டங்க ளுக்கும் நானே நேரடியாக வருவேன் என்று சொல்லி இருக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் பொதுச்செயலாளர் துரை முருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் கே.என்.நேரு,  பொன்முடி, ஆ.ராசா எம்.பி., அந்தியூர்  செல்வராஜ், டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., சபாநாயகர் அப்பாவு உள்பட  முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்ட னர்.