சென்னை,பிப்.19- சட்டமன்ற தேர்தலில் எப்படி கூட்டணியோடு ஒற்றுமையாக சேர்ந்து வெற்றி பெற்றோமோ அதேபோல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெறுவோம் என்று திருமாவளவன் கூறினார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தாம்பரம், கடப்பேரி பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமா வளவன் பார்வையிட்டார். பின்னர் செய்தி யாளர்களை சந்தித்தார். அப்போது, “தமிழ்நாட்டில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் திமுக கூட்ட ணியே வெற்றிபெறும். தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளை திமுக கூட்டணியே கைப்பற்றும்” என்றார். சட்டமன்ற தேர்தலில் எப்படி கூட்டணி யோடு ஒற்றுமையாக சேர்ந்து வெற்றி பெற்றோமோ அதேபோல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெறுவோம் என்றும் அவர் கூறினார். சென்னை மற்றும் தாம்பரம் மாநகராட்சி மேயர் பதவிகள் பட்டியலின பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது பாராட்டு தெரிவித்த திருமாவளவன், தலைவர் பதவிகள் குறித்து தேர்தல் முடிவுக்கு பின்னர் முதலமைச்ச ருடன் கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து பேசி முடிவு எடுப்போம் என்றும் கூறினார்.