tamilnadu

img

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்

21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியது; நகராட்சி, பேரூராட்சிகளிலும் அதிமுக படுதோல்வி

கணிசமான இடங்களில் சிபிஎம் வெற்றி

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கணிசமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பிலும், கட்சியின் சார்பிலும் போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளர்கள் பெற்றுள்ள மகத்தான வெற்றிக்கு கட்சியின் மத்தியக்குழு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளது. 
மாலை 6.30 மணி நிலவரப்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகராட்சிகளில் 24 வார்டுகளை கைப்பற்றியுள்ளது. சென்னை மாநகராட்சியில் 4 வார்டுகள், மதுரை மாநகராட்சியில் 4 வார்டுகள், கோயம்புத்தூர் மாநகராட்சியில் 4 வார்டுகள், திண்டுக்கல் மாநகராட்சியில் 3 வார்டுகளில் சிபிஎம் வெற்றி பெற்றுள்ளது.  நகராட்சிகளில் 41 வார்டுகளை கைப்பற்றியுள்ளது. கோவில்பட்டி நகராட்சியில் சிபிஎம் போட்டியிட்ட 5 வார்டுகளையும் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. பேரூராட்சிகளில் 101 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. (விபரங்கள் உள்ளே)


சென்னை, பிப்.22- தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணி பிரம் மாண்டமான வெற்றியை ஈட்டி யுள்ளது. அதிமுகவின் கோட்டை கள் என கருதப்பட்ட அனைத்து இடங்களையும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தகர்த்துள் ளது. இக்கூட்டணியில் இடம்பெற் றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கணிசமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.  தமிழக நகர்ப்புற உள்ளாட்சி மன்றங்களுக்கு பிப்.19 அன்று தேர்தல் நடைபெற்றது. பிப்ரவரி 22 செவ்வாயன்று காலை முதலே வாக்கு எண்ணும் பணி துவங்கி யது. துவக்கம் முதலே பேரூ ராட்சி, நகராட்சி மற்றும் மாநக ராட்சி வார்டுகளின் வெற்றி விவ ரங்கள் வெளியாகத் துவங்கின.

துவக்கம் முதலே திமுக தலைமை யிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தொடர்ந்து முன்னிலை பெற்று வந்தது. இந்நிலையில் மாலை 6.30 நிலவரப்படி, தமி ழகத்தில் மொத்தமுள்ள 21 மாநக ராட்சிகளையும் திமுக கைப்பற் றும் அளவிற்கு மாநகராட்சி வார்டு களில் மகத்தான வெற்றியை ஈட்டி யது. நகராட்சிகள் மற்றும் பேரூ ராட்சிகளிலும் அதிமுக படு தோல்வியை சந்தித்தது.  சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் மாலை 6 மணி நிலவரப்படி முடிவு கள் தெரிந்த 128 வார்டுகளில் 110க்கும் அதிகமான வார்டுகளை திமுக கூட்டணி கைப்பற்றியது.  மொத்தமுள்ள 138 நகராட்சி கள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு நடத்தப்பட்ட இத்தேர்தலில், பெரும் பாலான நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளையும் திமுக அணி கைப்பற்றியுள்ளது. குறிப்பாக  அதிமுகவின் கோட்டை என கரு தப்பட்டு வந்த கோவை மண்டலத்  தில் மொத்தமுள்ள 33 பேரூராட்சி களில் 31 பேரூராட்சிகளை கைப் பற்றி திமுக கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள 7 நகராட்சிகளையும் கைப்பற்றியுள் ளது.

சேலம் உள்ளிட்ட கோவை மண்டலத்தில் கிடைக்கப் பெற் றுள்ள படுதோல்வி அதிமுகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை, மதுரை உள்ளிட்ட சில மாநகராட்சிகளின் வார்டு களில் வாக்கு எண்ணும் பணி மாலை 6.30 மணி வரை முடிவடை யாத நிலை இருந்தது.  திமுக தலைமையிலான கூட் டணி வெற்றி பெற்றதைத் தொட ர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் மற்றும் அமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி நினைவி டங்களில் மரியாதை செலுத்தினர். தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்களும் கூட்டணி கட்சி களின் தொண்டர்களும் வெற்றி யை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.  மகத்தான வெற்றியை அளித்துள்ள தமிழக மக்களுக்கு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் நன்றியும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.