tamilnadu

img

கிருஷ்ணகிரியில் மேலும் 114 தீக்கதிர் சந்தா வழங்கல்

கிருஷ்ணகிரி, ஆக.9- கிருஷ்ணகிரி மாவட்டத் தில் தீக்கதிர் சந்தா சேகரிப்பு பணி கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்தது. முதல் கட்டமாக கட்சியின் மாநில செயற்குழு உறுப்பி னர் என்.குணசேகரனிடம் 86 புதிய சந்தாக்கான தொகை  வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் தீவிர மாக சந்தா சேர்ப்பு இயக்கம்  நடைபெற்றது. இந்த சந்தாக்களை ஒப்படைக்கும் நிகழ்வு ஆக.8 அன்று தேன் கனிக்கோட்டையில் செயலாளர்கள் டி.வெங்க டேஷ், ராஜா, தேவராஜ் ஆகியோர் தலைமையிலும், ஓசூரில் சி.பி.ஜெயராமன், எஸ். முனியப்பா, கிருஷ்ண கிரியில் டி.ராஜா,கே. மகா லிங்கம், கே.சாமு, அண்ணா மலை ஆகியோர் தலைமை யிலும் நடைபெற்றது. ஒன்றிய மற்றும் வட்டாரக் குழுக்கள் கெல மங்கலம் 13, தளி, 17, அஞ் செட்டி 4, ஓசூர் ஒன்றியம் 8, சூளகிரி 3, கிருஷ்ணகிரி 22, போச்சம்பள்ளி 12, ஊத்தங்கரை 10, சிங்காரப் பேட்டை 10 மற்றும் ஓசூர் மாநகரம் 10, பர்கூர் 5 என  மொத்தம் 114 (6 மாதம்  மற்றும் ஆண்டு) சந்தாக் களை கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பி. டில்லி பாபு, மாவட்டச் செயலாளர் ஜி.கே. நஞ்சுண்டன்., தீக்க திர் சென்னைப் பதிப்பு செய்தி ஆசிரியர் சி.ஸ்ரீரா முலு ஆகியோரிடம் வழங்கி னர். இந்த நிகழ்வுகளில் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர். சேகர்,  வி. சாம்ராஜ், எக்ஸ். இருதய ராஜ், எஸ். ஆஞ்சலா மேரி,  சி. பிரகாஷ் மற்றும் மாவட்ட  குழு உறுப்பினர் மகா லிங்கம், லெனின் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முழுக்க முழுக்க கிராமப் புற பகுதிகளை கொண்ட தளி, ஊத்தங்கரை, கிருஷ் ணகிரி பகுதி குழுக்கள் தங்களது இலக்கையும் கடந்து சந்தாவை சேகரித் துள்ளது. மேலும் சில ஒன்றிய குழுக்கள் இலக்கை  நெருங்கிவிட்டன. மாவட்டம்  முழுவதும் சந்தா சேகரிப்பு  பணி தொடர்ந்து நடந்து வருவதால் இந்த மாத  இறுதிக்குள் மாவட்டத் திற்கான இலக்கை கடந்து விடுவோம் என்று மாவட்டச் செயலாளர் நஞ்சுண்டன் தெரிவித்தார்.