tamilnadu

போக்சோ வழக்குகளில் முறைப்படி விசாரணை காவல்துறையினருக்கு டிஜிபி உத்தரவு

சென்னை,அக்.23-  பாலியல் தொடர்பான போக்சோ வழக்கு களை முறைப்படி விசாரிக்க வேண்டும் என்று   காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் வழக்குகள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தின் மூலம் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, போக்சோ வழக்குகளை விசாரணை அதிகாரி எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து  காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார். அதன்படி,  போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டவுடன் முதல் தகவல் அறிக்கையை சம்பந்தப்பட்ட மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவல ருக்கு உடனடியாக அனுப்ப வேண்டும். விசா ரணை அதிகாரிகள் 164 கிரிமினல் சட்டத் தின்படி தேவைப்பட்டால் மட்டுமே, பாதிக்கப்பட்ட சிறார்களின் வாக்குமூலத்தை வீடியோ பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு வீடியோ பதிவு செய்ய நேரிட்டாலும், காவல்துறை சார்ந்த புகைப்படக் கலை ஞர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த அறிவுறுத்தல்களை பின்பற்றாத விசாரணை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

;