ஈரோடு, ஆக. 2- பெருந்துறை சிப்காட் வளாகத்தில் பட்டியலின மக்களுக்காக அமைக்கப் பட்ட தொழிற்கூடங்களை பயன்பாட்டி ற்குக் கொண்டு வர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் புதனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை தாலுக்கா, ஈங்கூர் கிராமத்தில் சிப்காட் வளாகத்தில் பட்டியல் இன மக்களை தொழில் முனைவோர் ஆக்கும் திட்டத்தின்படி 200 பின்னலாடை தொழிற்கூடங்கள், கட்டி முடிக்கப் பட்டு முப்பது ஆண்டுகள் ஆகியும், இதுவரை பயன்பாட்டிற்கு கொண்டு வராததை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெருந்துறை பேருந்துநிலையம் அருகே நடைபெற்ற இவ்வியக்கத்தி ற்கு என்.சுந்தரவடிவேலு தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பி னர் எம்.சின்னதுரை சிறப்புரையாற்றி னார். இதில், ததீஒமு மாநில துணைத் தலைவர் யு.கே.சிவஞானம் நிறை வுரையாற்றினார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், ததீஒமு மாவட்ட தலைவர் பி.பி. பழனிசாமி, செயலாளர் மா.அண்ணாதுரை, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.பழனிசாமி, சி.பரம சிவம், தாலுகா செயலாளர் பி.முத்து பழனிசாமி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் வி.ஏ.விஸ்வநாதன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.