tamilnadu

img

மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைக்க வலியுறுத்தல்

மாநில நெடுஞ்சாலை ஆணையத்தால் 5000  நிரந்தர அரசுப் பணியி டங்கள் பறிபோகும் அபாயம்  உள்ளது. எனவே இந்த  ஆணையத்தை உடனடியாக  கலைக்க வேண்டும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்  சங்க மாநில செயற்குழு  கூட்டத்தில் வலியுறுத்தப் பட்டது. திருச்சியில் தோழர் இரா.முத்துசுந்தரம் இல்லத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மாநி லத் தலைவர் மா.பாலசுப்பிர மணியன் தலைமை வகித் தார்.  மாநிலச் செயலாளர் செ.சையது யூசுப் ஜான் அஞ்சலி தீர்மானத்தை வாசித் தார். சங்கப் பொதுச் செய லாளர் ஆ.அம்சராஜ் வேலை  அறிக்கையை முன்வைத் தார்.

கூட்டத்தில், “தமிழக அரசு மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிட்ட அரசாணை எண்.140 மூலம் கார்ப்ப ரேட் நிறுவனங்கள் சுங்கச்சா வடி அமைத்து வரி வசூ லிக்க வழிவகை செய்யப் பட்டுள்ளது. இது பொதுமக்க ளுக்கு பெரும் சுமையாக அமையும். இதனை கண்டித்து, ஜன.20 முதல் பிப்.28 வரை மக்களிடம் கை யெழுத்து பெறும் இயக்கம், பிப்.14 அன்று வட்டத் தலை நகரில் ஆர்ப்பாட்டம், பிப்.25 அன்று தலைநகரில் மறியல் போராட்டம், மார்ச்  26 அன்று முதல்வரிடம் கோரிக்கை மனு அளிப்பு உள்ளிட்ட போராட்டங்களை நடத்த உள்ளோம். மேலும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சரண் விடுப்பு ஊதிய அகவிலைப்படி நிலு வையை வழங்க வேண்டும். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை  உயர்நீதிமன்ற உத்தர வின்படி பணிக்காலமாக கணக்கிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் ச.மகேந்திரன், சு.செந்தில்நாதன், கு. பழனிச்சாமி, கோ.ஹரிபால கிருஷ்ணன், மா.மகாதே வன் ஆகியோர் முன்னிலை  வகித்தனர். திருச்சி மாவட் டத் தலைவர் எம்.ஜீவா னந்தம், ஆர்.இளங்கோவன் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர். மாநிலப் பொரு ளாளர் இரா.தமிழ் நன்றி கூறினார்.