சென்னை, ஜன. 2 - தமிழகத்தில் டெல்டா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் இணைந்து 3ஆவது அலையாக பரவுகிறது என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கைபும் அதிகரித்து வருகி றது. இதனால் தமிழகத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் நடைபெறும் தடுப்பூசி செலுத்தும் முகாமை பார்வை யிட்டபின் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: ஜன.3ந் தேதி முதல் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட வர்க்ளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி போடும் பணியை முதலமைச்சர் தொடக்கி வைக்கிறார். ஜன.10ந் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கவுள்ளது. 2ஆம் தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்களுக்கு பிறகு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. முதற்கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும். ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 முதல் 4 நாட்களிலேயே நெகடிவ் என வந்து விடுகிறது. தமிழகத்தில் டெல்டா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் இணைந்து 3ஆம் அலையாக பரவுகிறது. இவ்வாறு அவர் கூறினார்