தில்லி அம்பேத்கர் பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தல்
தில்லியில் உள்ள அம்பேத்கர் பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தலில் இந்திய மாணவர் சங்கம் (எஸ்எப்ஐ) அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தில் கடைசியாக 2019ஆம் ஆண்டில் தேர்தல் நடைபெற்றது. மாணவர் பேரவைத் தேர்தல்களை நடத்த வேண்டும் என்று எஸ்எப்ஐ தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்தது. அதன் விளைவாகத் தற்போது மாணவர் பேரவைக்கான தேர்தல்கள் (மார்ச் 4) நடந்துள்ளன. இந்தப் பல்கலைக்கழகத்தில் காஷ்மீரி கேட், கரம்புரா, லோதி மற்றும் குதுப் என்று நான்கு கல்வி வளாகங்கள் உள்ளன. இந்த நான்கு வளாகங்களில் 45 மாணவர் பேரவைக்கான இடங்கள் இருக்கின்றன. இவற்றிற்கான தேர்தல் நடைபெற்று, அதன் முடிவுகள் தற்போது (மார்ச் 5) வெளியாகியுள்ளன. மொத்தமுள்ள 45 இடங்களில் எஸ்எப்ஐ 24 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலம் பெற்றி ருக்கிறது. இவற்றில் 13 இடங்களில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டா ர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பல் கலைக்கழகத்தின் மத்திய ஒருங்கி ணைப்புக் குழுவில் இடம்பெறும் ஐந்து உறுப்பினர்களைத் தீர்மானி க்கும் இடத்தில் இந்திய மாணவர் சங்கம் உள்ளது. மாணவர் பேரவை யின் மத்தியக்குழுவாக இது இயங்கும். எஸ்எப்ஐக்கு அடுத்தபடி யாக ஏஐஎஸ்ஏ அமைப்பு 6 இடங்களி லும், பாஜகவின் ஏபிவிபி 3 இடங்களி லும், சுயேச்சைகள் 12 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். அம்பேத்கர் பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தல் அம் பேத்கர் பல்கலைக்கழக மாணவர் பேர வைத் தேர்தல் முடிவுகளைத் தனித்து பார்க்க இயலாது. ஏற்கெனவே ஜவ ஹர்லால் நேரு, ராம்ஜாஸ் கல்லூரி ஆகியவற்றில் வெற்றி மற்றும் தில்லிப் பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தலில் தொடர்ந்து வாக்குகள் அதிகரிப்பு ஆகிய வற்றோடு இணைத்தே இந்த வெற்றி யையும் பார்க்க வேண்டும் என்று கரம்புரா வளாக எஸ்எப்ஐ ஒருங்கி ணைப்பாளர் அனன் கூறுகிறார்.