tamilnadu

img

தாமதித்தால் மீண்டும் பிரம்மாண்ட கிளர்ச்சியை சந்திக்க நேரிடும்

மோடி அரசுக்கு சம்யுக்த கிசான் மோர்ச்சா எச்சரிக்கை

புதுதில்லி, பிப். 1 - வேளாண் சட்டங்களை எதிர்த்தும் குறைந்த பட்ச ஆதார விலை உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தும் போராடிய விவசாயிகளிடையே ஒன்றிய பாஜக அரசு 2021 டிசம்பரில் அளித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், அரசு தொடர்ந்து பாராமுகம் காட்டினால் மீண்டும் மிகப்பிரம்மாண்டமான எழுச்சியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் சம்யுக்த கிசான் மோர்ச்சா எச்சரிக்கை விடுத்துள்ளது. வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், குறைந்தபட்ச ஆதாரவிலையை சட்டப்பூர்வமாக நிறைவேற்ற வேண்டும் என்பதுள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு வருடத்திற்கும் மேலாக விவசாயிகளின் பேரெழுச்சி தில்லியை முற்றுகையிட்டிருந்தது. இந்நிலையில் போராட்டத்திற்கு பணிந்த மோடி  அரசு விவசாயிகளின் அனைத்து கோரிக்கை களையும் நிறைவேற்றுவதாக கடந்த டிசம்பர் மாதம் வாக்குறுதி அளித்தது. வேளாண் சட்டங் களை ரத்து செய்வதற்கான சட்டத்தையும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதைத் தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

இந்நிலையில் ஒரு மாத காலமாகியும் குறைந்தபட்ச ஆதாரவிலையை சட்டப்பூர்வ மாக நிறைவேற்றுவது, லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலைக்கு காரணமான ஒன்றிய பாஜக அமைச்சர் அஜித் மிஸ்ராவை பதவியிலிருந்து வெளியேற்றுவது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாமல் ஒன்றிய அரசு காலம் கடத்தி வருகிறது. இது விவசாயிகளுக்கு இழைக்கப் பட்ட துரோகம் என்று விமர்சித்த சம்யுக்த கிசான் மோர்ச்சா டிசம்பர் 31 அன்று “துரோகதினம்” என்று அறிவித்து மோடி அரசைக் கண்டித்து நாடு தழுவிய கண்டன இயக்கத்திற்கு அறை கூவல் விடுத்திருந்தது. அதை ஏற்று நாட்டின்  அனைத்துப் பகுதிகளிலும் பல லட்சக்கணக்கான விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். குடியரசுத் தலைவரிடம் முறையீடுசெய்யும் விதமாக மாவட்ட ஆட்சியர்கள், வட்டாட்சியர்கள் உள்ளிட்டோரிடம் நாடு முழுவதும் மனுக்கள் அளிக்கப்பட்டன.  பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், பீகார், மேற்குவங்கம், மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்தியப்பிரதேசம், ஆந்திரப்பிரதேசம், இமாச் சலப்பிரதேசம், தெலுங்கானா, ஒடிசா, தமிழ்நாடு,  ராஜஸ்தான், குஜராத், திரிபுரா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் மோடி அரசின் துரோகத்திற்கு கண்டன ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், கொடும்பாவி எரிப்பு உள்ளிட்ட பல வடிவங்களில் இப்போராட்டம் நடைபெற்றது. இதுதொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் தலைவர்கள் டாக்டர் தர்சன்பால், ஹன்னன்முல்லா, ஜக்ஜீத்  சிங், தல்லேவால், ஜோகிந்தர் சிங், சிவக் குமார் சர்மா, யதுவீர் சிங், யோகேந்திர யாதவ்  ஆகியோர் விவசாயிகளுக்கு அளித்த வாக்கு றுதிகளை மோடி அரசு நிறைவேற்றாவிட்டால் மீண்டும் மிகப்பிரம்மாண்டமான விவசாயிகளின் எழுச்சியை நடத்துவதைத் தவிர இந்திய விவ சாயிகளுக்கு வேறு வழியில்லை என்று எச்சரித்துள்ளனர். 

மேலும், எதிர்வரும் ஐந்து மாநிலத் தேர்த லில், குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் நடைபெற உள்ள தேர்தலில் பாஜகவுக்கு கடுமையான தண்டனையை அளிப்பது என விவசாயிகள் உறுதியேற்றிருக்கிறார்கள்; உத்தரப்பிரதேச தேர்தலில் பாஜக வீழ்த்தப்படுவது உறுதி என்றும் அவர்கள் தங்களது அறிக்கையில் குறிப்பிட்டு ள்ளனர். பிப்ரவரி 3 அன்று இது தொடர்பாக உத்த ரப்பிரதேசத்தில் விவசாயிகளின் தலைவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளிப்பார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மார்ச்  28, 29 தொழிலாளர் வேலைநிறுத்தம்

விவசாயிகள், தொழிலாளர்களின் கோரிக் கைகளுக்காக பிப்ரவரி 23, 24 தேதிகளில் நடை பெற இருந்த அனைத்து மத்திய தொழிற்சங்கங் களின் மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டம், ஐந்து மாநிலத் தேர்தல் அறிவிப்பின் காரணமாக மார்ச் 28, 29 தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தையும் மாபெரும் வெற்றிபெறச் செய்ய நாடு முழுவதும் விவசாயிகள் அமைப்புகள் ஒன்றிணைந்து களத்தில் நிற்கும் என்றும் சம்யுக்த கிசான் மோர்ச்சா கூறியுள்ளது.

குறைந்தபட்ச ஆதாரவிலை

குறைந்தபட்ச ஆதாரவிலை தொடர்பாக மோடி அரசு தொடர்ந்து தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டுவருவதையும் சம்யுக்த கிசான் மோர்ச்சா விமர்சித்துள்ளது. டிசம்பர் 31 திங்க ளன்று நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் முதல் நாளில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய் வறிக்கை 2021-22ல், தற்போதைய குறைந்தபட்ச ஆதாரவிலை அறிவிப்புக்கான விலை கோட்பாடு குறிப்பிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறான தாகும். விவசாயிகளால் நேரடியாக செலவு செய்யப்பட்ட இடுபொருள் செலவுகள் மற்றும் குடும்ப உழைப்பின் மதிப்பு ஆகிய இரண்டை மட்டும் கூட்டி அதன் அடிப்படையில் குறைந்த பட்ச ஆதாரவிலை நிர்ணயிப்பது என்ற பழைய  நடைமுறையையே மீண்டும் அரசு முன்மொழி கிறது. விவசாய இடுபொருட்களின் செலவு +  குடும்ப உழைப்பின் மதிப்பு + விளைபொரு ளுக்கான ஒட்டுமொத்த செலவுகள் ஆகிய வற்றுடன் 50சதவீதம் கூடுதலாக சேர்த்து ஒன்றரை மடங்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோட்பாட்டை ஏற்க மறுக்கிறது.  இது விவசாயிகளுக்கு உண்மையில் கிடைக்க வேண்டிய குறைந்தபட்ச ஆதாரவிலை யை முற்றாக மறுப்பதே ஆகும். பயிர் சாகுபடி முறைகள் மாறி வருவதாகவும் எனவே இவற்றை கணக்கில் எடுக்க வேண்டியது இல்லை என்றும் அரசு கூறுவது முற்றிலும் அநியாயமானதாகும். அந்த அடிப்படையில் அறிவிக்கப்படும் குறைந்த பட்ச ஆதார விலைகள் விவசாயிகளுக்கு எந்த பலனையும் தரப்போவதில்லை. அவை வெற்று உறுதிமொழிகளாகவே இருக்கும்.  எனவே குறைந்தபட்ச ஆதார விலை என்பதை சட்டப்பூர்வமாக உத்தரவாதம் செய்ய வேண்டும்; அனைத்து விளைபொருட்கள் - குறிப்பாக எண்ணெய் வித்துக்கள், சிறுதானியங்கள், பருப்பு வகைகள் உள்ளிட்ட அனைத்து வகையான விலை பொருள்களுக்கும் பொருந்தும் விதத்தில் ஒன்றரை மடங்கு விலை கிடைக்கும் வகையில் குறைந்தபட்ச ஆதாரவிலை அறிவிக்கப்பட வேண்டும் என்றும் சம்யுக்த கிசான் மோர்ச்சா தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.