tamilnadu

img

பாஜக அரசின் சூழ்ச்சிகளை முறியடித்து இந்தியா அணி வெல்வது உறுதி

‘அவுட்லுக்’ ஆங்கில இதழில் வெளியான தமிழ்நாடு  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களது நேர்காணலின் தமிழ்ச் சுருக்கம்

இந்த மூன்றாண்டுகளில் உங்கள் அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்கள் என்ன?

கல்வி, மருத்துவம், அடிப்படைக் கட்டமைப்பு, பொருளாதாரம் இந்த நான்கும்தான் ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை அளவிடுவதற்கான அம்சங்கள். பள்ளிக்கல்வி முதல் உயர்கல்வி வரை தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. இல்லம் தேடிக் கல்வி, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம் ஆகியவற்றால் பள்ளிக்கல்வி பயில்வோரின் எண்ணிக்கையும், உயர்கல்விக்குச் செல் வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தற்போதைய பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ள ஆண் மாணவர்களுக்கான ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டமும் நல்ல பலனைத் தரும் என்று உறுதியாகச் சொல்லலாம். உயர்கல்விக்கான கட்டமைப்பில் தமிழ்நாடு எந்தளவுக்குச் சிறந்து விளங்குகிறது என்பதை அகில இந்திய அளவிலான தரவரிசைப் பட்டியலே நிரூபிக்கும். இந்தியாவின் முதல் நூறு உயர்கல்வி நிறுவனங்களில் அதிக இடங்களைத் தமிழ்நாடு பெற்றுள்ளது. மருத்துவக் கட்டமைப்பில் ‘இந்தியாவின் மருத்துவத் தலைநகர்’ என்ற பெருமையைத் தமிழ்நாடு பெற்றுள்ளது. மக்களுக்கான மருத்துவச் சேவையில் இந்தியாவில் இரண்டா வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் போன்ற திட்டங்கள் மனித உயிர்களின் மகத்துவத்தை உணர்த்தக்கூடியனவாக உள்ளன.

தொழில் வளர்ச்சியில் கடந்த 3 ஆண்டு களில் பல கட்டங்கள் முன்னேறி இந்தியாவின் மூன்றாவது பெரிய மாநிலம் என்ற நிலைக்குத் தமிழ்நாடு உயர்ந்துள்ளது. மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் 2023 நிதியாண்டில் முத லிடத்துக்குத் தமிழ்நாடு உயர்ந்துள்ளது. தொழில் முதலீடுகளுக்கு உகந்த மாநிலங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 14-ஆவது இடத்தில் இருந்த தமிழ்நாடு எங்கள் ஆட்சிக்காலத்தில் மூன்றாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. புதிய  முதலீடுகள், புதிய தொழிலகங்கள், வேலை வாய்ப்புகள் என பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளோம். இந்தியாவில் மொத்தமாகப் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கையில் தமிழ்நாட்டின் பங்களிப்பு மட்டும் 40 விழுக்காடாக உள்ளது. ஒரு  டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற இலக்கை நோக்கிய பொருளாதார வளர்ச்சியை மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்குமான சமச்சீரான வளர்ச்சியாகவும், பாலினச் சமத்துவம் கொண்ட வளர்ச்சியாகவும் கட்டமைத்து வருகிறோம். 

மாநில சுயாட்சி குறித்த ராஜமன்னார் குழு அளித்த அறிக்கையைச் சட்டப்பேரவையில் நிறைவேற்றிய பின் 50 ஆண்டுகளில் நடந்துள்ள பெரும் அதிகாரக் குவியலை எப்படி நோக்குகிறீர்கள்?

ஒன்றிய அரசு தில்லியிலே அமைந்துள்ளது. ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன்பே கல்வி, சுகாதாரம் போன்ற மாநிலப் பட்டியலில் உள்ள அதிகாரங்கள் ஒன்றிய அரசின் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நிலையில், கடந்த பத்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் நீட் தேர்வு, உதய் மின் திட்டம், ஜி.எஸ்.டி. என மாநிலங்களின் அதிகாரத்தை முற்றிலுமாகப் பறிக்கும் செயல்பாடுகள் மிக அதிகமாக நிறைவேறியுள்ளன. இது ஜனநாயகத்திற்கும் அரசியலமைப்புச் சட்டத்திற்கும் எதிரான மோசமான நடவடிக்கை யாக உள்ளது. அதனால்தான், தமிழ்நாடு, அதி லும் குறிப்பாக, தி.மு.க. மாநில உரிமைகளைத் தொடர்ந்து வலியுறுத்துவதுடன், மாநில சுயாட்சிக் கொள்கையை வலியுறுத்தி வருகிறது.

தவறான ஜி.எஸ்.டி நடைமுறைப்படுத்தலும், நிதிப் பகிர்வில் மாநில அரசுகளை மதிக்காத போக்கும் நிலவும் சூழலில் எப்படி திட்டங்களை செயல்படுத்துகிறீர்கள்?

2023 டிசம்பர் மாதம் மிக்ஜம் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களும், திருநெல்வேலி – தூத்துக்குடி போன்ற தென் மாவட்டங்களும் பேரிடரை எதிர்கொண்ட நிலையில், பிரதமர் மோடி அவர் களிடம் நான் நேரில் சந்தித்து வலியுறுத்தியும் பேரிடர் நிவாரண நிதியை இதுவரை வழங்க வில்லை. மாநில அரசே தனது பங்களிப்பாகக் குடும்ப  அட்டைதாரர்களுக்கு 6000 ரூபாய் வழங்கி யது. ஒன்றிய அரசுக்குத் தமிழ்நாட்டின் பங்களிப் பாகச் செலுத்தப்படும் ஒவ்வொரு ரூபாய் வரிக்கும் 29 பைசா மட்டுமே ஒன்றிய அரசின் பகிர்வாகத்  திரும்பக் கிடைக்கிறது. மிகக் கடினமான பொரு ளாதார நெருக்கடியை எதிர்கொண்டாலும், மக்கள் நலனுக்கான திட்டங்களைச் செயல்படுத்துவதில் சுணக்கமின்றிச் செயல்படுகிறோம். மாநில அரசுக்குக் கிடைக்கக்கூடிய பத்திரப் பதிவுத் துறை வருவாய், வாகனப் பதிவு வருவாய், புதிய முதலீடுகள் உள்ளிட்டவற்றைக் கொண்டு திட்டங்களுக்கான முன்னுரிமை அடிப்படை யில் ஒவ்வொன்றையும் கவனித்துச் செயல்படுத்து கிறோம். மூன்றாண்டு காலத்தில் நிமிர்த்தப்பட்ட பொருளாதார நிலையினால் தமிழ்நாடு இதனைச் சமாளிக்கிறது.

நீங்கள் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின் மையமாக இருக்கிறீர்கள்.  இந்தியா கூட்டணியில் இருந்து நிதீஷ்குமார் வெளியேறியது உங்கள் வெற்றி வாய்ப்பைப் பாதிக்குமா?

இந்தியா கூட்டணியின் தொடக்க கூட்டத்தி லேயே அந்தந்த மாநிலங்களில் வலிமையுள்ள கட்சிகளைக் கருத்திற்கொண்டு தொகுதிப் பங்கீட்டி னை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலி யுறுத்தினேன். நிதீஷ்குமார் அவர்கள் சொந்தக் காரணங்களைக் கருதி வெளியேறினாலும் அவருடைய பீகார் மாநிலத்தில் இந்தியா கூட்டணி வலுவாக இருப்பதுடன், அங்கே தொகுதிப் பங்கீடும் சுமூகமான முறையில் நடந்து வருகிறது. அதுபோலவே வாய்ப்புள்ள இடங்களில் தேசியக் கட்சிகளும் மாநிலக் கட்சிகளும் தங்களுக்குரிய பங்களிப்புடன் செயல்படுகின்றன. தேர்தல் களம் என்று வருகிறபோது ஒரு சில சவால்கள் எல்லாத் தரப்புக்கும் இருக்கும். மக்கள் மனங்களை வெல்வதில் இந்தியா கூட்டணிக்கு எந்தச் சவாலும் இல்லை.

விசாரணை அமைப்புகள் ஒன்றிய அரசின் அரசியல் கருவிகளாக மாறி வருவதையும் அது இந்திய ஜனநாயகத்தைச் சிதைப்பதையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?

சுதந்திரமான விசாரணை அமைப்புகளை ஒன்றிய பா.ஜ.க அரசு தன் கைப்பாவையாகப் பயன்படுத்துகிறது என்பதை எதிர்க்கட்சிகளான நாங்கள் சொல்லித்தான் தெரிய வேண்டிய தில்லை. மக்களே அதைச் சொல்லத் தொடங்கி விட்டார்கள். பா.ஜ.க. ஆட்சியல்லாத மாநிலங்களில் உள்ள ஆளுங்கட்சியினர் மீதுதான் அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ. ஆகியவை பாய்கின்றன. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள ஊழல் புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஏற்கனவே ஊழல் புகாருக்கு ஆளான எதிர்க்கட்சி பிரமுகர் திடீரென பா.ஜ.க. பக்கம் சென்றுவிட்டால் உடனே அவரை புனிதராக்கி, அமைச்சர் பதவி கொடுக்கும் அளவிற்குக் கறை  நீக்கக்கூடிய ‘அற்புத வாஷிங் மிஷின்’ பா.ஜ.க. விடம் இருக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொண்டு விட்டார்கள். தேர்தல் நெருங்க நெருங்க பா.ஜக.. அல்லாத கட்சியினர் மீதான பாய்ச்சல்கள் இன்னும் கூடுதலாக இருக்கும். அதனை எதிர்கொள்வ தற்கான வலிமை இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு உண்டு. பா.ஜ.க.வை முழுமையாக அம்பலப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக அது அமையும்.

ஆளுநர் போடும் முட்டுக்கட்டைகளை மீறித் தமிழ்நாடு எப்படி தனது அரசியல் அபிலாஷைகளை நனவாக்குகிறது?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்க த்தை மீறிய அதிகாரம், நியமனப் பதவியான ஆளு நருக்குக் கிடையாது என்பதைத் தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் காலத்தி லிருந்தே ஆளுநர் பதவியை நீக்க வேண்டும் என்றும், ஆளுநர் பதவி அவசியம் என்றால் அது மாநில அரசின் பங்களிப்போடு, தேர்ந்தெடுக்கும் முறையில் அமைந்திட வேண்டும் என்றும் வலி யுறுத்தி வந்துள்ளோம். அண்மைக் காலமாக வெளிப்படையான அரசியல்வாதிகளைப் போல ஆளுநர்கள் செயல்படுவதைத் தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளம், தெலுங்கானா, மேற்கு வங்கம், பஞ்சாப்  உள்ளிட்ட மாநிலங்களில் காண்கிறோம். ஆளு நரின் அதிகார வரம்புமீறல்களைச் சட்ட மன்றத்தில் எதிர்கொண்டு முறியடித்தோம். நீதி மன்றத்திலும் சட்டவழியில் போராடிக் கொண்டி ருக்கிறோம். அரசியல்சட்டத்தை மதிக்காமல், ஜனநாயகத்தின் மாண்புகளைக் கெடுக்கும் வகையில் ஆளுநர்களை வைத்து இணை அர சாங்கம் நடத்த முற்படும் ஒன்றிய பா.ஜ.க அர சின் சூழ்ச்சிகளை முறியடிப்போம்.

2024 தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற உதவும் காரணிகளாக எவை இருக்கும்? மோடியை வெல்வது உண்மையில் சாத்தியமா?

ஜனநாயக நாட்டில் யாரும் நிரந்தரமாக முடிசூட்டிக் கொள்ள முடியாது. 2004-இல் ‘இந்தியா ஒளிர்கிறது’ என்று பா.ஜ.க. மீண்டும் ஆட்சியைப் பிடிக்க நினைத்தது. ஆனால், தேர்தல் முடிவுகள் அதற்கு எதிர்மறையாக அமைந்தன. பத்தாண்டு கால பா.ஜ.க .ஆட்சியில் இந்தியாவில் பெரும் தொழிலதிபர்கள் தவிர வேறு  எந்த ஒரு தரப்பினரும் நிம்மதியாக இல்லை. உழவர்கள், தொழிலாளர்கள், சிறு வணிகர்கள், மாணவர்கள், சிறுபான்மையினர், பட்டியலின மக்கள் எனப் பல தரப்பினரும் எதிர்கொள்கின்ற சிக்கல்களே இந்தியா கூட்டணிக்குச் சாதகமான தாக அமையும். யார் பிரதமராக வரவேண்டும் என்பதைவிட, மீண்டும் யார் வந்துவிடக்கூடாது என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். அது தேர்தல் முடிவுகளில் தெரியும்.