tamilnadu

img

விஷமில்லா மலிவான காய்கறிகள் : சிபிஎம் நடத்தும் சந்தை

திருவனந்தபுரம், ஏப்.13- கேரளத்தில் நடக்கவிருக்கும் விஷு பண்டிகைக்கு ‘நஞ்சில்லா காய்கறி கள்’ என்ற நோக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் சந்தைகள் தொடங்கப்பட்டன. பாளை யம் மார்க்கெட் அருகே, முதல்வர் பின ராயி விஜயன், எஸ்.வசந்தகுமாரிக்கு காய்கறிகள் வழங்கி, விற்பனையை துவக்கி வைத்தார். கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் விவசாயிகள் மற்றும் உள்ளூர் மக்களைத் திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் இயற்கை வேளாண்மை முகாம் தொடங்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த விவசாயம் மேற் கொள்ளப்பட்டது. அது மாநிலத்தின் விவசாய தன்னிறைவு மற்றும் பாது காப்பான உணவுக்கு பெரும் பங்களிப்பை செய்து வருவதாக முதல்வர் கூறினார். கத்தரிக்காய், வெள்ளரி, பயிறு, வழுதனை (நீளமான பச்சை கத்திரி), கத்திரி, புடலை, பாகற்காய், கீரை,  சேம்பு, சேனை கிழங்கு, வெண்டைக் காய், பச்சை மிளகாய், இஞ்சி, மாங்காய் போன்ற காய்கறிகள் சந்தை யில் கிடைக்கின்றன. காய்கறி கிட்  ரூ.150க்கு கிடைக்கிறது. ஒருங்கி ணைந்த வேளாண் பிரச்சாரக் குழு, கூட்டுறவு வங்கிகள், விவசாயிகள் சங்கங்கள், தொழில்நுட்பக் குழுத் தொழிலாளர்கள் தலைமையில் வெள்ளிக்கிழமை மாலை வரை சுமார் ஆயிரம் சந்தைகள் செயல்படும். நிகழ்ச்சியில் பிரச்சாரக் குழு தலைவர் எம்.சுவராஜ், விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் எம்.விஜய குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் வி.ஜாய், ஒருங்கி ணைந்த விவசாயப் பிரச்சார மாவட்டக் கருத்தாளர் கே.சி.விக்ரமன்,  விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் வி.எஸ்.பத்மகுமார் ஆகியோர் பேசினர்.