tamilnadu

வளர்ச்சிப் பணிகளில் முறைகேடு திருவெண்ணெய்நல்லூரில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

வளர்ச்சிப் பணிகளில் முறைகேடு திருவெண்ணெய்நல்லூரில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம், ஜூன் 4 - விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய் நல்லூர் வட்டத்தில் கடந்த 6 மாதங்களாக அரைகுறையாக கிடப்பில் போடப்பட்டுள்ள சாலைப் பணியை துரிதப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  அடிப்படை வசதிகள் கடந்த 6 மாதங்களாக அரைகுறையாக கிடப்பில் போடப்பட்டுள்ள அ.புதூர் கிராமத்தில் விவசாயிகளின் நிலங்களுக்கு செல்லும் பாதை அமைக்கும் பணியை உடனடியாக தொடங்கி தார்ச்சாலையாக அமைத்து கொடுக்க வேண்டும். தானியம் உலர்த்த தனியாக களம் அமைத்து கொடுக்க வேண்டும். நில எடுப்பு செய்து சுடுகாடு அமைத்து கொடுக்க வேண்டும் என்று இந்த ஆர்ப்பாட்டத்தில் வலி யுறுத்தப்பட்டது. சாலை வசதி இருவேல்பட்டிலிருந்து காரப்பட்டு செல்லும் தார் சாலை கடந்த 45 ஆண்டு காலமாக மக்கள் பயன்பாட்டில் உள்ளது. புதிதாக தார் சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டு ஓராண்டு ஆகியும் வனத்துறை யின் தடையினால் வேலை நடைபெறாமல் சாலை குண்டும், குழியுமாக கிடக்கிறது. அரசு தலையிட்டு வனத்துறை தடையை நீக்கி உடனடியாக தார் சாலை அமைத்து தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். ஏமாற்றம் காந்தலவாடி கிராமத்தில் 20-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு 2023-24 ல் தொகுப்பு வீடு கட்ட அனுமதி பெற்று கம்பி, சிமெண்ட் ஏமாற்றிய ஊராட்சி செய லாளர் வி.குமரகுரு, இதுவரைக்கும் வீடு கட்டித் தராமல் ஏமாற்றி வருகிறார். இவ ருக்கு பொறியாளர், ஓவர்சீயர் (பணித்தளப் பொறுப்பாளர்) உடந்தையாக செயல்படுவதால் உரிய நடவடிக்கை எடுத்து,பாதிக்கப்பட்டவர்களுக்கு விரை வில் தொகுப்பு வீடுகள் முடித்துத்தர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டச் செயலாளர் கே.சிவக்குமார் தலைமை தாங்கினார்.  மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.குமார், எஸ்.முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலி யுறுத்தி பேசினர். சங்கத்தின் வட்டத் தலைவர் பி.தங்கவேல்,  பி.பழனி, ஆர்.பாலகிருஷ்ணன், கே.அண்ணாமலை உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.