சிபிஎம் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
திருச்சிராப்பள்ளி, மே 26- திருச்சி மாவட்டம் துறையூரில் கடந்த 25.5.1975-இல் தோழர் கோவிந்தன் தலைமையில், தோழர்கள் அனந்த நம்பியார், எரக்குடி நாராயணன், வழக்கறிஞர் முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொடியை ஏற்றினர். அந்நிகழ்வின் பொன்விழா ஆண்டு மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் துறையூர், உப்பிலியபுரம் ஒன்றிய குழுக்கள் சார்பில் ஞாயிறன்று துறையூரில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்டக்குழு உறுப்பினர் ஆனந்தன் தலைமை வகித்தார். கூட்டத்தில் மூத்த தோழர்கள் கே.வி.எஸ். இந்துராஜ், காசிராஜன், முத்துசாமி, சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பன்னீர்செல்வம், பாண்டியன், முத்துக்குமார் ஆகியோர் பேசினர். அகில இந்திய வழக்கறிஞர் சங்க முன்னாள் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் முத்துகிருஷ்ணன் கட்சிக்கொடியை ஏற்றி வைத்து, துவக்க உரை ஆற்றினார். புறநகர் மாவட்டச் செயலாளர் சிவராஜன், மாநிலக் குழு உறுப்பினர் ஜெயசீலன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார். முன்னதாக ஒன்றியச் செயலாளர்