பழனி, ஜூன் 1- பழனியில் உழைப்பாளி மக்க ளின் படைவீடாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பழனி நகர்க் ்குழு, பழனி ஒன்றியக்குழு அலு வலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. பழனி நகரம் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் செங்கொடி இயக்கம் கிராமம் கிராமமாக வளர்ச்சி பெற்ற தற்கு காரணமாக விளங்கிய தலை வர்கள் ஆர்.ராமராஜ், வி.ஏ.கருப்பு சாமி, பி.சுப்ரமணி, என்.பழனிவேல் ஆகியோரது உருவப்படங்கள் திறந்து வைக்கப்பட்டன. ஞாயி றன்று நடைபெற்ற இந்த அலுவலக திறப்புவிழாவையொட்டி கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பால கிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இளைஞர்களின் பயிற்சி பட்டறை
அலுவலகங்களை திறந்து வைத்து கட்சியின் மாநிலச்செய லாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகை யில், அன்றைய தலைமுறையினர் செய்த தியாகங்கள் குறித்து இன்றைய தலைமுறைக்கு தெரி யாது. அதனை கற்றுத்தரும் ஒரு பள்ளிக்கூடமாக இந்த அலுவலகம் செயல்பட வேண்டும். பெண் களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகாமாக, ஏழை எளிய மாண வர்களுக்கு பாடம் சொல்லித்தரும் இலவச இரவு பாடசாலையாக, ஆயக்குடியிலே நமது தோழர் ராமமூர்த்தி அரசு போட்டித் தேர்வு வகுப்புகளை நடத்துவது போல இளைஞர்களுக்கு பயிற்சி பட்டறை யாக இந்த அலுவலகம் செயல்பட வேண்டும். அன்றாடம் மக்கள் தங்க ளது பிரச்சனைகளை தீர்க்கும் இடமாக, இந்த கட்டடம் அமைய வேண்டும். அதே போல பலமான கட்சியை இந்த பழனி நகரில் கட்டு வதற்கும் நாம் சபதம் எடுக்க வேண்டும். நமது செங்கொடி இயக்க தலைவர்கள் அந்த காலத்தில் தீண்டாமைக்கெதிராக நடத்திய போராட்டங்களால் தான் இன்றைக்கு தலித் மக்கள் தலைநிமிர்ந்து நடக் கிறார்கள் என்றால் அதில் ஐய மில்லை. அப்படிப்பட்ட தீண்டாமை ஒழிப்பு போராட்டங்களை நடத்த வேண்டும். அன்றைக்கு நாம் நடத்திய நில மீட்புபோராட்டங்கள், ஜமீனுக்கு எதிராக நமது தலை வர்கள் நடத்திய போராட்டங்கள் போல இன்றைக்கு விவசாயிகளை, குத்தகை விவசாயிகளை பாது காக்கிற போராட்டத்தை முன்னெடுக்கிற அலுவலகமாக இந்த அலுவலகம் திகழ வேண்டும் என்று கூறினார்.
செங்கொடியின் பெருமை
மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம் பேசும் போது, பழனியில் தொழிலாளர்களின் படைவீடாக இந்த அலுவலகம் திறக்கப்பட்டிருக்கிறது. இது தேசத்திற்கு வந்திருக்கிற நோய் தீர்க்கிற மருத்துவமனையாக விளங்கும். செங்கொடி என்றாலே சிலர் பதறுகிறார்கள். நகரச்செய லாளர் கந்தசாமி உள்ளிட்ட தோழர்கள் இந்த அலுவலக திறப்பு விழாவிற்காக வேலை செய்து கொண்டிருக்கும் போது அங்கு வந்த சார்பு காவல் ஆய்வாளர் “ டேய் கூலிக்காரனெல்லாம் இறங்குங் கடா” என்கிறார். நாங்கள் கூலிக்கா ரர்கள்தான். அதில்தான் எங்கள் இயக்கத்தின் பெருமை அடங்கி யிருக்கிறது என்று கூறினார்.
முருகனை காப்பாற்றும் சிபிஎம்
மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி பேசுகையில், தமிழ் நாட்டில் உள்ள அப்பாவி ஏழை மக்கள் எங்களை காப்பாற்று என்று பழனி முருகனை கையெடுத்து கும்பிடுகிறார்கள். அப்படி கை யெடுத்து கும்பிடும் மக்களையும், பழனி முருகனையும் காப்பாற்றக் கூடிய கடமை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கு இருக்கிறது. அனைத்து மதங்களில் உள்ள மக்க ளுக்கும், அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளுக்கும் பொதுவான அலு வலகமாக நமது கட்சி அலுவல கம் விளங்கும். அப்படித்தான் திண்டுக்கல்லில் தோழர்கள் ஏ.பால சுப்ரமணியம், என்.வரதராஜன், எஸ்.ஏ.தங்கராஜன் ஆகியோர் துப்புரவுத்தொழிலாளர்கள், தோல்பதனிடும் தொழிலாளர்களை திரட்டி போராடினார்கள். இந்த பகுதி யில் தோழர்கள் ஆர்.ராமராஜ், வி.ஏ. கருப்புசாமி, போன்ற பெரும் தலை வர்கள் ஏழை எளிய மக்களுக்காக வும், சிறு குறு விவசாயிகளுக்காக வும் போராடினார்கள். அவர்கள் வழி யில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து வந்து 3 முறை எம்எல்ஏ வாக இருந்த தோழர் என்.பழனிவேல் மக்களுக்கு சேவையாற்றி னார். அப்படிப்பட்ட இளைஞர்களை தேர்ந்தெடுத்து தலைவர்களாக்கிய பெருமை தோழர்கள் ஆர்.ராமராஜ், வி.ஏ.கருப்புசாமி ஆகியோருக்கு உள்ளது என பேசினார்.
நீண்டகால கனவு
சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் என்.பாண்டி பேசுகையில், இந்த பழனி நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு அலுவலகம் வேண்டும் என்கிற நீண்ட கால கனவு நிறைவேறியிருக் கிறது. இன்றைக்கு அரசியல் நெருக் கடி கூடுதலாக உள்ள காலம். பழனி நகரம் ஒரு கோவில் நகரம் என்ப தால் இதனை மையப்படுத்தி பாஜக வெறுப்பு அரசியலை முன்னெடுக்கிற ஒரு களமாக உள்ளது. அந்த எச்சரிக்கை உணர் வோடு இந்த பகுதியில் ஒரு வலுவான கட்சியாக மார்க்சிஸ்ட் கட்சியை வளர் க்க வேண்டும். பாஜகவை முறி யடிக்க, மக்கள் கோரிக்கைகளை வென் றெடுக்க உழைப்பாளி மக்களை திரட்டுகிற பாசறையாக இந்த அலு வலகம் விளங்கும் என்று கூறினார்.
சீர்குலைவு சக்திகளுக்கு இடமில்லை
மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சி தானந்தம் பேசுகையில், பழனி நகரின் அமைதியை சீர்குலைக்கும் எந்த சக்தி வந்தாலும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தலைமையிலே அவர்களை விரட்டியடிப்பார்கள் என்பது கடந்த கால வரலாறு. இந்த நகரத்தின் வளர்ச்சிக்காக வ.இராஜமாணிக்கம் நகர்மன்றத் தலைவராக இருந்த போது பல்வேறு பணிகளை செய்தார். தற்போது கந்த சாமி துணைத்தலைவராக இருக்கிற போதும் ஏராளமான பணிகளை செய்து வருகிறார். பழனி பேருந்து நிலையம் ஐ.எஸ்.ஓ. தரச்சான்று பெற்ற தரமான பேருந்துநிலையமாக அமைந்தது. கோடைக்கால நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டது. அப்பழுக்கற்ற தலைவர்களாக நமது நகர்மன்ற தலைவர்கள் விளங் கினார்கள். அதே போல நமது முன்னாள் எம்எல்ஏ என்.பழனி வேல் காலத்தில் குதிரையாறு அணை, வரதமாநதி அணை போன்ற அணைகள் எல்லாம் அவர் கோரிக்கை வைத்து சட்டமன்றத்தில் குரல் எழுப்பியதால் உருவானவை. இந்த பகுதியின் வளர்ச்சிக்காக, மக் களுக்காக தொடர்ந்து போராடுகிற அலுவலகமாக அமைந்திருக்கிறது. மக்களின் நம்பிக்கையை வென் றெடுக்கும் வகையில் இந்த அலு வலகம் அமையும் என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாநி லக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மூத்த தலைவர் பி.கே.கருப்பு சாமி, மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் வ.இராஜமாணிக்கம், கமலக்கண்ணன், நகரச்செயலாளர் கந்தசாமி, ஒன்றியச்செயலாளர் பி.செல்வராஜ் உள்ளிட்ட பலர் பேசினர். (நநி)