சென்னை,அக்.12- மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதித் திட்ட கூலி பாக்கியை ஒன்றிய பாஜக அரசை விடுவிக்க தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று முதலமைச்சரி} டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்த னர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்ட மன்ற குழு தலைவர் நாகை மாலி, எம். சின்ன துரை ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்தனர். அப்போது, வறுமை ஒழிப்பு முதன்மை நோக்கமாக கொண்டு கடந்த 18 ஆண்டு களாக செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், கிராமப்புற ஏழை குடும்பங்களுக்கு பேருதவியாக இருந்து வருகிறது. விவசாயம் நவீனமயமாக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், வேலை இழந்துள்ள விவசா யக் கூலி தொழிலாளர்களுக்கு இத்திட்டம் சிறு ஆறுதல் அளிக்கிறது. தற்போது தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் வேலை வழங்கப்பட்டது. கடந்த 2 மாதங்களாக நடைபெற்ற வேலைகளுக்கு ஊதியம் இன்னும் பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்படவில்லை. ஆகவே, ஒன்றிய அரசை வற்புறுத்தி ஊரக வேலைத் திட்டப் பயனாளிகள் ஊதியத்தை பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், தமிழ்நாட்டில் முழு அளவில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். தினக் கூலி ரூ. 294 முழுமையாக வழங்க வேண்டும். திட்டத்திற்கான நிதியை மற்ற துறை களின் கட்டுமானப் பணிகளுக்கு பயன் படுத்துவதை கைவிட வேண்டும். வேலை நாட்கள் 200 நாட்களாக, தினக்கூலியை ரூ.600 ஆக உயர்த்த ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்த னர். மனுவை பெற்றுக்கொண்ட முதல மைச்சர் உரிய நடவடிக்கைகள் மேற்கொள் ளப்படும் என்று தெரிவித்தார்.