தூத்துக்குடி , ஜூன் 26- தூத்துக்குடி மாவட்டம், கோவில் பட்டியைச் சேர்ந்த எழுத்தாளர் உதய் சங்கருக்கு சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார் விருது அறிவிக்கப் பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 1960ஆம் ஆண்டு பிறந்தவர் எழுத்தாளர் உதயசங்கர். உதயசங்கர் 1978 முதல் எழுதி வரு கிறார். இது வரை 8 சிறுகதைத் தொகுப்பு கள், 7 கட்டுரைத் தொகுப்புகள், மலை யாளத்திலிருந்து 7, ஆங்கிலத்தி லிருந்து 3 மொழிபெயர்ப்பு நூல்கள், கவிதைத் தொகுப்புகள் 5, ஒரு குறு நாவல் தொகுப்பு ஆகியன வெளி வந்துள்ளன. சிறார் இலக்கியத்தில் 1991 முதல் எழுதி வருகிறார். இதுவரை கதை மற்றும் நாவல் உட்பட 51 புத்தகங்கள், ஒரு சிறார் பாடல் புத்தகம், 67 சிறார் மொழிபெயர்ப்பு நூல்கள் வெளி வந்துள்ளன. சுமார் 150 படைப்பு களை எழுதியுள்ளார். நீலக்கனவு, யாவர் வீட்டிலும், பிறிதொரு மரணம் உள்ளிட்ட சிறுகதை நூல்களை உதயசங்கர் எழுதினார். இந்நிலையில், இவர் எழுதிய ‘‘ஆதனின் பொம்மை’’ என்ற நாவலுக்காக பால புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உதய சங்கர் அவர்களை திங்கட்கிழமை கோவில் பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.பி.ஆறு முகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் கு.ரவீந்திரன், கே.சீனிவாசன், கோவில்பட்டி நகர செயலாளர் ஜோதி பாசு, ஒன்றிய செயலாளர் தெய்வேந்தி ரன், ஒன்றிய குழு உறுப்பினர் விஜயராஜ் ஆகியோர் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து மேலும் மேலும் மக்களுக்கான படைப்புகளை தந்து பல உச்சங்களை தொட வேண்டும் என்று வாழ்த்துகள் தெரிவித்தனர்.