tamilnadu

img

சிபிஎம் கேரள மாநில மாநாடு இன்று துவங்குகிறது

கொச்சி, பிப்.28- எர்ணாகுளத்தில் மார்ச் 1 முதல் 4 வரை நடைபெற உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில மாநாடு வரலாற்றில் முக்கிய மாநாடாக அமையும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மாநில மாநாட்டையொட்டி எர்ணா குளத்தில் செய்தியாளர்களை கொடியேரி பாலகிருஷ்ணன் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், மாநாட்டில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், முதலமைச்சருமான பினராயி விஜயன், ‘எதிர்கால கேரளா, புதிய கேரளா’ என்ற  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை  அறிக்கையை முன்வைக்கிறார் எனத் தெரிவித்தார். இம்முறை நவகேரள உருவாக்கத்திற் கான செயல்திட்டம் தொடர்பாக கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் செயற் பாட்டு அறிக்கை மற்றும் ஆவணத்திற்கு மாநாட்டில் அங்கீகாரம் வழங்கப்படவுள்ளது. சிபிஎம் ஒரு மையப்படுத்தப்பட்ட தலை மையின் கீழ் செயல்படுகிறது. அந்த ஒற்றுமை யை பறைசாற்றும் மாநாடாக மாநில மாநாடு அமையும் என கொடியேரி தெளிவுபடுத்தி  னார். இடதுசாரி இயக்கம் வெகுஜன மக்கள் திரளின் இயக்கமாக மாற்றப்பட வேண்டும். அதற்கு இன்று இருப்பதை விட மக்கள் செல்வாக்கு உள்ள கட்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட வேண்டும். கேரளத்தைப் பொறுத்தவரை இடதுசாரிஅரசின் செயல்பாடு மிகவும் முக்கியமானது. முதல்பினராயி அரசு செய்த பணிகள் மீது மக்கள் மிகுந்தநம்பிக்கை வைத்திருந்தனர். இரண்டாவது பினராயிஅரசு புதிய திட்டங்களை வகுக்க வேண்டியுள்ளதுதடைகள் அகற்றப்படவேண்டியுள்ளது. அதற்காக ஒவ்வொரு துறையிலும் என்ன செய்ய வேண்டும் என விவாதிக்கிறோம்.

அடுத்த 25 ஆண்டுகால வளர்ச்சித்திட்டத்திற்கான வரைபடத்தை இப்போதேதயாரிக்க வேண்டும். இதன் ஒரு பகுதியாக, சிபிஎம் ஏற்றுக்கொள்ளும்வளர்ச்சிக் கண்ணோட்டம் இடதுஜனநாயக முன்னணிஅமர்வுகளில் விவாதிக்கப்படும். இடதுஜனநாயக முன்னணி உறுப்பு க்கட்சிகளின் கருத்து ஏற்கப்படும். அதேசமயம், பல்வேறு தரப்பு மக்களும் தங்கள் கருத்துக்களைதெரிவிக்க வாய்ப்பு ஏற்படுத்தப்படும்அதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு இடதுஜனநாயக முன்னணியின் ஆட்சி ஆவணம் இறுதி செய்யப்படும். அதற்கு உதவும் கட்சியின் தொலைநோக்குப் பார்வை மாநில மாநாட்டில் உருவாக்கி அறிவிக்கப்படும் என கொடியேரி விளக்கமளித்தார்.

கேரள நலனுக்கு உகந்த தொழில் முதலீடுகள்

கட்சியின் சித்தாந்தத்துடன் ஒத்துப்போகும் வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.கேரளாவில் அனைத்து வளர்ச்சியும் கட்சியின்கொள்கைப்படியே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 1957 ஆம்ஆண்டிலேயே, இஎம்எஸ்அரசாங்கம்முதலீட்டுஏற்பு கொள்கையை ஏற்றுக்கொண்டது தேர்தலுக்கு முன் 1956இல் திருச்சூரில் நடை பெற்ற மாநில மாநாடு இதற்கு வழிவகுத்தது. அப்போது கேரளாவின் வளர்ச்சி தொலைநோக்கு ஆவணம்உருவாக்கப் பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அந்த வளர்ச்சிக் கண்ணோட்டத்தில் தனியார் முதலீட்டைஈர்ப்பது குறித்து குறிப்பிடப்பட்டுள் ளது. கேரளாவுக்கு சொந்த வளங்கள் இல்லாத நிலையில், தனியார் மூலதனம் தேவைப்படும் என்று பார்க்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக மாவூர் குவாலியர் ரேயான்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது. ஆயினும், பெருமளவில் முதலீடு செய்ய எவரும் முன்வரவில்லை. அதைமுன்வைத்துத்தான், ‘விமோசன சமரம்’ என்ற பெயரில், இஎம்எஸ் அரசுக்கு எதிராக அரசியல்எதிரிகள் ஒன்றிணைந்தார்கள். அதனால், வளர்ச்சியைமேற்கொண்டு செல்ல முடியவில்லை. ஆனால், இன்று சூழல் மாறிவிட்டது. முதலீடு செய்ய பல முதலீட்டாளர்கள் முன் வருகின்றனர். கேரளாவின் நலனுக்கு பாதகம்விளைவிக்காத, சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்காத திட்டங்களுக்கு - இதுபோன்ற முதலீட்டுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதுநோக்கமாக உள்ளது. எனவே, எர்ணாகுளம்மா நில மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளஇந்த ஆவணம் வளர்ச்சி என்ற பிரச்சனையின் பல்வேறுஅம்சங்களை உள்ளடக்கியதாக  இருக்கும் என செய்தியாளர்களிடம் கொடியேரி கூறினார்.