கொல்கத்தா, மே 11- மம்தாவின் ஊழல் அரசைக் கண்டித்து மேற்கு வங்க மாநிலம் பெஹாலாவில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி புதனன்று மாலை பிரம்மாண்ட பேரணி நடத்தியது. மேற்குவங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடத்தி வருகிறது. மாநிலத்தில் முன்னெப் போதும் இல்லாத வகையில் ஊழல், மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. நாட்டையே உலுக்கிய சாரதா, நாரதா சிட்பண்ட் மோசடி வழக்கு விசாரணைகள் இன்னும் முழுமையாக நிறைவடை யாத நிலையில், ஆசிரியர் நியமன ஊழல் வழக்கு மற்றும் பல ஆயிரம் கோடியில் வங்கதேசத்திற்கு மாடு கள் கடத்தியது என அனைத்து மெகா ஊழல் வழக்குகளிலும் திரி ணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் தலை வரும், முதல்வருமான மம்தா பானர்ஜியின் அரசியல் வாரிசான அண்ணன் மகன் அபிஷேக் பானர்ஜி க்கு ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் தொடர்பிருப்பதாக சிபிஐ, அமலாக்கத் துறை குற்றம்சாட்டி யுள்ள நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்ததி லிருந்து அரங்கேறி வரும் ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்ட அனை வர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி பெஹாலாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பேரணி நடத்தப்பட்டது. கட்சியின் மாநிலச் செயலாளர் முகமது சலீம் மற்றும் கல்லோல் மஜூம்தார் உள்ளிட்டோர் பேரணிக்கு தலைமை தாங்கினர்.