சென்னை,பிப்.14- மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க நிதி ஒதுக்காமல் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மா.சின்னதுரை பேசியது வருமாறு: மிக்ஜம் புயல் மற்றும் வரலாறு காணாத கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட துயரிலிருந்து மீள்வதற்குள் தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெரும் இயற்கை பேரிடர்களை அரசு சந்தித்தது. அரசு இயந்திரம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டது. முதலமைச்சரின் உத்தரவுக்கிணங்க அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், தன்னார்வலர்கள், பணியாளர்கள் ஆற்றிய பணி மிகச் சிறப்பானது. குறுகிய காலத்தில் துரித நடவடிக்கை களை மேற்கொண்ட முதலமைச் சருக்கு பாராட்டுதல்களை தெரிவித் துக் கொள்கிறோம். பாஜக ஓர வஞ்சனை! ஒன்றிய அரசு, இந்த பேரிடருக்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்க வில்லை. ரூ. 37 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என்று மாநில அரசு வற்புறுத்தியும் ஒரு பைசா கூட இதுவரை வழங்க வில்லை. இந்த நிலையில், தமிழ்நாட்டு மக்களை பாதுகாக்க மாநில அரசு நடவடிக்கை எடுப்பது வரவேற்கத்தக்க தாகும்.
சிபிஎம் வரவேற்பு
மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் அடைய வேண்டு மென்ற நோக்கோடு ஒன்றிய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வருகிறது. தமிழ்நாடு அரசு இதை ஒருபோதும் அமல்படுத்தாது என்று ஆளுநர் உரையில் குறிப்பிட்டி ருப்பதை வரவேற்கிறோம். எப்போதும் இல்லாத அளவுக்கு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி 14.54 லட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்பு பெறும் வகையில் ரூ. 6.64 லட்சம் கோடி முதலீடு செய்வதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பின்தங்கிய மாவட்டங்களில் தொழிற் சாலைகள் அமைய வழிவகை மேற்கொள்ள வேண்டும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் மேம்பாட்டு திட்டம் 2024 சட்ட முன்வடிவை இந்த கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்துவது பாராட்டத்தக்க தாகும். அயோத்திதாசப் பண்டிதர் குடி யிருப்பு மேம்பாட்டு திட்டத்தில் குடிநீர், சாலை வசதி, செய்து கொடுத்திருப்பது. பூங்கா, நூலகம் அமைந்துள்ளது பாராட்டுக் குரியதாகும். ஆதிதிராவிட மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் போதுமான அளவில் இல்லை. அதற்கு நிரந்தர தீர்வை உருவாக்கும் வகையில் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இடிந்து போன வீடுகள் ஏராளமாக இருக்கிறது. மக்கள் கூட்டுக் குடியிருப்புகளில் வசிக்க முடியாமல் தவிக்கிறார்கள். ஆகவே, அயோத்திதாசப் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்த அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
தமிழகத்திற்கு துரோகம்
தமிழகத்திற்கு தொடர்ந்து உதவி செய்ய மறுக்கும் ஒன்றிய அரசின் போக்கு, மிகப்பெரிய பாதிப்பாக இருந் தாலும், மக்களின் அடிப்படை தேவை களை செய்து கொடுக்கும் மாநில அரசு, இன்னும் கூடுதலாக நெருக்கடிகளை சுமந்து கிராமப்புற ஏழை-எளிய மக்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும். ஆலையை மூட வேண்டும் சென்னை எண்ணூர் பகுதியில் 33 கிராமங்கள், 70 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வரு கின்றனர். அங்கு அமோனியா வாயு கசிவு தொடர்ந்து 60க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். ஆயிரக்கணக் கானோருக்கு மூச்சுத் திணறல் பாதிப்பு ஏற்பட்டது. அப்பகுதியில் அமோனியா மற்றும் கந்தக அமிலம், பார்ப்பரிக் அமிலம், சல்பேட், ஜிப்சம் ஆகிய இரசாயனங்கள் இருப்பது ஆபத்து நிறைந்ததாக உள்ளது. எனவே கோரமெண்டல் உரத் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டுமென அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். எனவே அந்த ஆலையை, அரசு நிரந்தரமாக மூடு வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அரசு போக்குவரத்து தொழிலாளர்க ளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். 90 மாதங்களாக வழங்காத பஞ்சப்படி உயர்வை வழங்க வேண்டும். மாநிலத்தில் 1 கோடியே 10 லட்சம் விவசாயத் தொழி லாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு தனியாக துறை மற்றும் நல வாரியம் ஏற்படுத்த வேண்டும். கோயில் நிலங்களில் குடியிருப்போர் உரிமை களை பாதுகாக்க வேண்டும். நெருக்கடியில்
குறு-சிறு-நடுத்தர தொழில்கள்
கொரோனா, ஜி.எஸ்.டி. வரி போன்ற பாதிப்புகள் குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன. ஆகவே, இவர்களுக்கு மின் நிலை கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். அல்லது குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மின் வாரியம் மூன்றாக பிரிப்பு கைவிடுக
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தை மூன்றாக பிரிப்பதற்கு அரசாணைகள் 6 மற்றும் 7 கைவிட வேண்டும். 1.4.2003க்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்தவருக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். தேசிய சுகாதார திட்டம் (என்.ஹெச்.எம்) ன் கீழ் பணி செய்யும் எம்.ஆர்.பி. தொகுப்பூதிய செவிலியர் கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். வாச்சாத்தியில் பழங்குடியின மக்கள் பாதிக்கப்பட்டு அதில் 18 பெண்கள் பாலியல் வன்கொடுமை களுக்கு ஆளாகினர். இதில் சம்பந்தப் பட்ட அனைவரும் குற்றவாளிகள் என மாவட்ட அமர்வு நீதிமன்றம், உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றமும் இதனை உறுதி செய்துள்ளது. எனவே, இத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ள அம்சங்களை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தொகுதி கோரிக்கைகள்
தொகுதி கோரிக்கைகள் கீரனூரை மையப்படுத்தி கந்தர்வகோட்டை, விராலிமலை ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. 60 கிலோ மீட்டர் சுற்றள வில் அரசு கல்லூரிகள் ஒன்றும் கிடையாது. ஆனால், 30க்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளிகள் இருக்கிறது. ஆகவே, கந்தர்வகோட்டை தொகுதியில் அரசு பொறியியல் கல்லூரி ஒன்று துவங்க வேண்டும். சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு பத்து கோரிக்கைகள் நிறை வேற்றி தருவதாக முதலமைச்சர் அறிவித்தார். அதன்படி பல சட்டப்பேரவை உறுப்பினர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றப்பட்டு வருகிறது. எனவே, தனது தொகுதி மக்களின் சார்பில் வழங்கப்பட்ட பத்து கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றி கொடுக்க வேண்டும். கந்தர்வக்கோட்டை தொகுதி மக்கள் நீர் ஆதாரமில்லாமல் அவதிப்படு கிறார்கள். எனவே, புதிய ஆற்றுப்படுகை கொண்டு வருவதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கந்தர்வக்கோட்டையில் ஒரு டிஎஸ்பி அலுவலகம் அமைத்து கொடுக்க வேண்டும். இவ்வாறு சின்னத்துரை பேசினார்.