tamilnadu

img

சிபிஎம் கிளர்ச்சிப் பிரச்சார இயக்கம்

சிபிஎம் கிளர்ச்சிப் பிரச்சார இயக்கம்

கோவை மாவட்டம், சிங்காநல்லூர் நகரக்குழு சார்பில், வரதராஜபுரம் -நீலிக்கோணம்பாளையம் பகுதியில் மக்கள் சந்திப்பு பிரச்சாரம் நடைபெற்றது. நகரச் செயலாளர் ஆர்.மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் தி.மணி பிரச்சாரத்தை துவக்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.தெய்வேந்திரன் மற்றும் கே.ரத்தினகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சியில், மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது. கீழ்வேளூர் வடக்கு ஒன்றிய செயலாளர் என்.எம். அபுபக்கர் தலைமையில் வீடுவீடாகச் சென்று, துண்டு பிரசுரம் விநியோகம் செய்தனர். பின்னர், சிபிஎம் நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து தெருமுனைப் பிரச்சார உரை நிகழ்த்தினார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ். சுபாதேவி, எஸ்.பாண்டியன், எஸ்.துரைராஜ் உள்ளிட்டோர் பங்கு பெற்றனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பிரச்சார இயக்கம் துவங்கி நடைபெற்று வருகிறது.  தரங்கம்பாடி ஒன்றியம், திருவிளையாட்டம் கடைவீதியில் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஏ.ரவிச்சந்திரன் தலைமையில் வியாழனன்று புறப்பட்ட பிரச்சார இயக்கத்தை மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் துவக்கி வைத்து உரையாற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் குணசுந்தரி, அம்மையப்பன், ஐயப்பன், செல்வ பாக்யவதி மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள், கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். செம்பனார்கோவில்  மேல முக்கூட்டில், செம்பை ஒன்றியச் செயலாளர் கே.பி.மார்க்ஸ் தலைமையில் புறப்பட்ட பிரச்சார இயக்கத்தை, மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர் கண்ணகி மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.