tamilnadu

img

வண்ணக்கதிர் 1

கூர்க் தெற்கின் காஷ்மீர் இயற்கையின் அற்புத வனப்பு!

வாரத்தின் இறுதி நாட்களில் அல்லது விடுமுறை தினங்களில் சுற்றுலா செல்ல விரும்புவோர், சந்தடியற்ற அமைதியான சூழலை இயற்கைக் காட்சிகளுடன் சேர்ந்து அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பது சகஜம். அதற்கு ஏற்ற இடம், கர்நாடக மாநிலத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக அழைக்கப்படும் கூர்க் அல்லது குடகு மலை பிரதேசம். கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்  ளது இந்த மலநாடு. உத்தர கன்னடா, சிக்கமகளூரு, உடுப்பி, பெலகாவி, தட்சிண கன்னடா,  ஹாசன், குடகு, ஷிவமொக்கா உள்ளிட்ட 13 மாவட்டங்களையும் 65 சட்டமன்ற தொகுதி களையும் 61 வட்டங்களையும் உள்ளடக்கியது. கடல் மட்டத்தில் 900 மீட்டரில் இருந்து துவங்கும் இந்த மலை 10,715 மீட்டர் உயரம் வரை  பரவி உள்ளது. அதன் இயற்கை எழில், வரலாற்று முக்கியத்துவம், சாகசப் பொழுது போக்கு கள் என அனைத்தையும் ஒருங்கே கொண்ட முழுமையான சுற்றுலா தளமாக அமைந்துள்  ளது எனும் கூர்க் மலை. அழகிய மலை நகரம். இதில் ஓர் அழகிய மலை நகரம் மடிக்கேரி.  அற்புதமான இயற்கையின் அழகு, பலமான வரலாறு மற்றும் கலாச்சார பாரம்பரி யங்கள் அதன் வசீகரத்தை வெளிப்படுத்துகின்றன. இயற்கையின் அதிசய அழகுக்கும், மேகங்களின் மூடு பனியால் மூடப்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலைகளின் கம்பீரமான சிக ரங்களுக்கும், இனிமையான வானிலைக்கும் பிரபலமானது கூர்க். பெங்களூரு மாநகரில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டோம். 125 கிலோ மீட்டர்  ரத்தை கடந்ததும் மைசூர் சாலையிலிருந்து பிரிந்து செல்லும் சாலை மார்க்கமாக சுமார்  120 கிலோ மீட்டர் பயணித்தால், மைசூர், மாண்டியாவை கடந்து சுமார் 3 மணி நேரத்தில்  கூர்க் மலையை அடைந்து விடலாம்.  1956-க்கு முன்பு இது ஒரு தனி மாநிலமாகும். பிறகு, மைசூர் மாநிலத்துடன் இணைக்கப்  பட்டது. மொழிவாரி மாநிலங்கள் அமைந்த போது கூர்க் மற்றும் மைசூர் இரண்டும் கர்நாடக  மாநிலத்துடன் இணைந்தது. தற்போது மூன்று சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய குடகு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த மலைநகரத்தின் புவியியல் எல்லைக்குள் நுழைந்த உடன், சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் காட்டுப் பகுதி. உள்ளே புகுந்ததும் வளைந்து நெளிந்து போகும் கொண்டை  ஊசி சாலை. அதன் இருபுறமும் ஓங்கி வளர்ந்து நிற்கும் மரங்கள். கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,355 அடி உயரம் கொண்ட மலையின் உச்சியை அடையும்வரைக்கும் பாதாள பள்ளம்,தொட்டபெட்டா போன்ற உயரம் கொண்ட பசுமை போர்த்திய இயற்கை எழில் மிகுந்த மலைகள் மற்றும் காடுகள் விரிந்து கிடக்கின்றன. கர்நாடக மாநிலத்தின் அருகில் உள்ள மாநிலங்களின் சுற்றுலா பயணிகள் கூர்க் பகுதிக்கு  செல்ல வேண்டும் என்றால் மார்ச் முதல் மே மாதம் வரை சிறந்த சீசன். அதனால்தான் இது கோடை கால ஓய்வுக்கு சிறந்த இடமாகவும் இருக்கிறது. இயற்கையின் இசைக் கச்சேரி இதழை வருடும் பனியின் காற்று, வண்ணமயமாக பூத்துக் குலுங்கும் மலர்கள், பூச்செடிகள், கொடிகள். நேரம் செல்லச் செல்ல மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம். ஓடை  தரும் வாடை காற்று. ஆசை குருவிகள், கிளிகள், குயில்கள் பாஷை இன்றி பாடும் ராகங்கள்,  ரம்யமான ஓசைகளை கேட்டதும் “செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோது தம்மா”, “குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா என் பைங்கிளி” என்ற பாடல் வரிகள்  நம்மை அறியாமலேயே ஞாபகத்துக்கு வருகின்றன. இந்தப் பகுதியை தாண்டி சுமார் ஐந்து கிலோ மீட்டர் சென்றதும் பலா மரங்களில் பூத்துக் குலுங்கும் பூக்கள், கைக்கு எட்டிய தூரத்தில் காய்த்து தொங்கும் பலாக்கள், மரத்திலேயே பழுத்து வெடித்ததால் வாசனை மூக்கைத் துளைக்கிறது. காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கி பலா பழத்தை எடுக்காமல் இருக்க முடியாது. சுமார் ஆயிரம் அடிக்கு  சரிவான பள்ளத்தாக்கு அங்கே விரிந்து கிடக்கிறது. வனவிலங்குகளின் சாம்ராஜ்யம் மறுபக்கத்தில், சாலைகளை சர்வ சாதாரணமாக கடந்து செல்லும் மலைப் பாம்புகள்,  தென்னை மரங்களை காட்டிலும் ஓங்கி வளர்ந்த  மரங்களுக்கு இடையில் படர்ந்து காணப்படும் அடர்ந்த செடிகளுக்குள் உலா வந்து கொண்டி ருக்கும் கரடி குட்டிகளை கார் கண்ணாடி களுக்குள் இருந்து பார்த்ததும், இது முழுக்க முழுக்க அடர்ந்த வனப் பகுதி என்ற ஆபத்து  நிறைந்த பகுதி என்பதையும் உணர்த்துகிறது. இவை அனைத்தையும் தாண்டிச் செல்லும் போது,  காட்டு யானைகள் மற்றும் கொடிய வனவிலங்கு கள் அதிகம் உலா வரும் வழித்தடம் என்பதை ஆங்காங்கே எச்சரிக்கிறது வனத்துறை. அதன்படி, ஒலிப்பான் மட்டுமல்ல வேகத்தை குறைத்து மிகுந்த கவனத்துடன் சென்றால் கூர்க் (மடிக்கேரி) மலையை அடையாளம். ஒரு சிறிய கிராமத்தைப் போன்று மிக குறைந்த  அளவிலான வீடுகள் ஒருபுறம், பழங்கள், தேநீர்,  நம்மூர் பெட்டிக் கடைகளைப் போன்ற மார்க்கெட்,  கடை தெருக்களில் தங்கும் விடுதிகளில் விழாக்  கோலம். மற்றொரு புறத்தில், இந்து உள்ளூர்  ஆதிவாசிகள், புத்த பிட்சுகள், கன்னடர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், மலையாளி கள் ஆகியோரின் கோயில்கள், வீடுகள் நிறைந்து  காணப்படுகின்றன. இயற்கையின் அற்புதம்  சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது அபே  நீர்வீழ்ச்சி. பள்ளத்தில் சாய்வான படிக்கட்டு களில் நடந்து சென்றதும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் காப்பி தோட்டங்கள் மற்றும் பசு மையான மசாலா தோட்டங்களால் சூழப்பட்ட 70 அடி உயரத்தில் இருந்து கொட்டி வரும் அழகிய  நீர்வீழ்ச்சியைப் பார்த்து பரவசம் அடையாமலி ருக்க முடியாது. அங்கிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்திற்கு  பயணித்ததால் சுமார் 200 அடி உயரத்தில் பால்  வெள்ளை நிறத்தில் பிரமிக்க வைக்கிறது மல்லள்ளி நீர்வீழ்ச்சி. அது சுற்றுலா பயணிகளை  மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்துகிறது. இயற்கையின் கொடைகளான என்றும் பசுமையான காடுகள், பசுமை பள்ளத்தாக்குகள், பனி படர்ந்த மலைகள், பரந்து பட்ட காபி மற்றும்  தேயிலை தோட்டங்கள், ஆரஞ்சு, வாழைத் தோப்புகள், பிரம்மகிரி வனவிலங்கு சரணால யம், விண்ணைத் தொடும் சிகரங்கள், சலசல வென ஓடும் ஓடைகள், நீர்வீழ்ச்சிகள், தலைக்  காவேரி என ஏராளமான இயற்கை அம்சங்கள்  நிறைந்த சுற்றுலா தளங்களைக் கொண்டுள்ள தால் இது இந்தியாவின் ‘ஸ்காட்லாந்து’ என்றும்,  தெற்கின் ‘காஷ்மீர்’ என்றும் அழைக்கப்படுகிறது. 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மடிக்கேரி  கோட்டை கம்பீரமாக ஐரோப்பிய மற்றும் இந்திய கட்டடக்கலை பாணிகளைப் பிரதிபலிக்கிறது. கிரானைட் கல் சுவர்கள், பிரம்மாண்ட நுழைவு  வாயில், இரண்டு கல் யானைகள், வரலாற்றுக்  கலைப் பொருட்களை கொண்ட அருங்காட்சி யகம் அனைத்தும் சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி யில் ஆழ்த்துகிறது. உலக பாரம்பரியத் தளம் சுத்தமான காற்று மற்றும் காற்றின் சிறந்த  தரக் குறியீடு காரணமாக இந்த நகரம் இந்தியா வில் முதலிடத்தில் உள்ளது. யுனெஸ்கோ நிறு வனத்தின் உலக பாரம்பரியத் தளங்களில் ஒன்றா கவும் இருக்கிறது. இந்த அழகான மலை நக ரத்தைப் பார்வையிட குறைந்தது நான்கு நாட்க ளாவது அங்கு தங்க வேண்டும் .கூர்க்கின் இயற்கை எழில், வரலாற்று முக்கியத்துவம், கலாச்சார வளம் ஆகியவை எல்லா சுற்றுலா  பயணிகளுக்கும் மறக்க முடியாத அனுப வத்தைத் தருகிறது. தெற்கின் காஷ்மீர் என்று அழைக்கப்படும் இந்த மலை நகரம், இயற்கை காதலர்களுக்கும் அமைதி தேடுவோருக்கும் சொர்க்கமாகவே திகழ்கிறது. கூர்க் மலையிலிருந்து பிற்பகல் 3 மணிக்குப் புறப்பட்டு மாலைப் பொழுதிற்குள் சமவெளிப் பகுதியை வந்தடைவது பாதுகாப்பானதாகும். அங்கிருந்து மைசூருக்குச் சென்றால், 15 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள பிருந்தாவன தோட்டம் நம்மை வரவேற்கும். அழகிய தாவரவியல் பூங்கா ஸ்ரீரங்கப்பட்டினத்தில் அமைந்துள்ள அற்புதமான தாவரவியல் பூங்கா, இந்தியாவின் மிக அழகான தோட்டங்களுள் ஒன்றாகும். நூற்றாண்டை நோக்கிப் பயணித்துக் கொண்டி ருக்கும் இந்தத் தோட்டம் வடக்கு மற்றும் தெற்கு  பிருந்தாவனம் எனும் இரண்டு முக்கியப் பகுதி களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. காவிரி அன்னை சிலைக்கு அருகில் அமைந்துள்ள தெற்கு பிருந்தாவனம் இந்தத் தோட்டத்தின் முக்கிய அடையாளமாகும். இந்தச்  சிலைக்கு முன்னால் உள்ள பகுதி ‘காவேரம்மா வட்டம்’ என்று அழைக்கப்படுகிறது. அங்கு இந்த  இசை நீரூற்று நிகழ்ச்சி இரவு 7 மணி முதல் 9 மணி வரை நடைபெறும். நிகழ்ச்சி மறக்க முடியாத  அனுபவங்களில் ஒன்றாகும். வண்ணமயமான மின் விளக்குகள் மற்றும் இசையுடன் ஒளிரும் நீரூற்றுகள் நம்மை மயக்கு கின்றன. தெற்கு பிருந்தாவனத்தின் வலது  புறத்தில் அமைந்துள்ள குழந்தைகள் பூங்கா வில் சறுக்குகள், கான்கிரீட் விலங்குகள், பறவை கள் போன்ற பல்வேறு விளையாட்டு அம்சங்கள்  நிறைந்துள்ளன. வடக்கு பிருந்தாவனம் மிகவும் கவர்ச்சிகர மான பகுதியாகும். இதில் நான்கு பரந்த மொட்டை மாடித் தோட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு  மொட்டை மாடித் தோட்டத்திலும் பசுமையான புல்வெளிகள், வண்ணமயமாக பூத்துக் குலுங்கும்  மலர்கள், அழகிய போகன்வில்லா மற்றும் அல்ல மண்டா தாவரங்கள், சைப்ரஸ் தாவரங்களின் மையப்பகுதியைச் சுற்றியுள்ள மலர்ப் படுக்கைகள் ஆகியவற்றைக் காணலாம்.செழிப் பான மலர்ப் படுக்கைகள், அலங்கரிக்கப்பட்ட வேலிகள் மற்றும் அலங்கார மரங்களின் மூச்ச டைக்கக் கூடிய காட்சியை இங்கு அனுபவிக்க லாம். மைசூர் அரண்மனைக்கு அருகில் அமைந்துள்ள இந்தத் தோட்டம் மனிதனால் உருவாக்கப்பட்ட அதிசயங்களுள் ஒன்றாகும். பழைய அரச வைபவத்தின் சாட்சி மைசூரை போன்று பெங்களூரிலும் அரண் மனை உள்ளது. 1878 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அரண்மனை தற்போது பெங்களூரின் முக்கிய ஈர்ப்பு மையமாக விளங்குகிறது. பழைய  அரச செல்வத்தின் நறுமணத்தை இன்றும் பாது காத்து வருகிறது.‘கட்டிடக்கலை அம்சங்கள் மன்னர் சாமராஜேந்திர உடையார் லண்ட னின் வின்ட்சர் கோட்டையில் இருந்து உத்வேகம்  பெற்று இந்த அரண்மனையை கட்டியதாகக் கூறப்படுகிறது. 45,000 சதுர அடி பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த ஆடம்பரமான அரண் மனை டியூடர் பாணி கட்டடக்கலை மற்றும் மர  உட்புறங்களால் பார்வையாளர்களை வசீக ரிக்கிறது. அரண்மனையின் வளாகம் 454 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக உள்ளது. 34 படுக்கைகள் மற்றும் ஒரு நீச்சல் குளம், வலு வூட்டப்பட்ட கண்காணிப்பு கோபுரங்கள், மர  வேலைப்பாடுகள், ஓவியங்கள் மற்றும் நேர்த்தி யான உட்புறங்கள் ஒரு பக்கம். மறுபக்கத்தில், அரண்மனைச் சுவர்களின் ஒரு பகுதியை பச்சைச் செடிகளால் மூடப்பட்டுள்ளது. நன்கு பராமரிக்கப்படும் வெளிப்புறம், மர விசிறி மற்றும்  இறக்குமதி செய்யப்பட்ட கலைப் பொருட்கள்,  அரண்மனை மைதானத்திற்குள் அமைக்கப் பட்டுள்ள பன் வேர்ல்ட் கேளிக்கை பூங்காவும்  அனைத்தும் சுற்றுலா பயணிகளை வசீகரிக்கிறது. அரண்மனையின் உள்ளே தரைத்தளத்தில் ஒளிரும் நீல பீங்கான் ஓடுகளால் அலங்க ரிக்கப்பட்ட கிரானைட் இருக்கைகள், விசித்திரக்  கதை போன்ற பிரபல ஓவியர் ராஜா ரவி வர்மா வின் ஓவியங்கள், கொடிகளால் மூடப்பட்ட சுவர்கள், முதல் மாடியில் அமைந்த தர்பார் மண்ட பம் என அனைத்தும் பார்க்க வேண்டிய ஒன்றாகும். சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகள் மொழிப் பிரச்சனைகள் உள்ள பார்வையா ளர்கள் அரண்மனையின் வரலாற்றை நன்கு புரிந்துகொள்ள உதவும் வகையில், இந்தி மற்றும்  ஆங்கிலத்தில் ஆடியோ வழிகாட்டுதல் வசதி கிடைக்கிறது. மையப் பெங்களூரில் அமைந்துள்ள இந்த அரண்மனையின் கண்கவர் கட்டமைப்பின் சின்னமான கோட்டைகள் மற்றும் விரிவான மர வேலைபாடுகள் இணைத்து இந்திய வர லாற்றில் கலாச்சார முக்கியத்துவம் மற்றும் ஆடம்பரமான அரசாட்சி ஆகிய இரண்டிற்கும் ஒரு முன்மாதிரி அடையாளமாக நிற்கிறது. முக்கிய சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், இந்த அரண்மனை பல்வேறு கலாச்சார நிகழ்வு கள், ராக் ஷோக்கள் மற்றும் திருமணங்க ளுக்கான சிறந்த இடமாகவும் விளங்குகிறது. தென்னிந்தியாவின் மிகவும் சக்தி வாய்ந்த அம்சங்களில் ஒன்றின் நேர்த்தியான மற்றும் ஆடம்பரமான சிறப்பை நேரில் காண இந்த இரு இடங்களும் சிறந்த வாய்ப்பளிக்கிறது. பிருந்தா வன தோட்டத்தின் இயற்கை அழகும், பெங்க ளூரு அரண்மனையின் வரலாற்று மகத்துவமும்  சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்திழுக்கும்.