சென்னை, ஜூன் 21 - மாநில அரசின் கொள் கைக்கு எதிராக மாநாடு நடத்திய கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். ‘தேசிய கல்விக் கொள்கையை உயர்கல்வி நிறுவனங்களில் நடை முறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள்’ எனும் தலைப் பில் இரண்டு நாள் மாநாடு ஜூன் 21-22 தேதிகளில் சென்னை வேளச்சேரி குரு நானக் கல்லூரி (தன்னாட்சி) யில் நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளி ட்டோர் கலந்து கொள்கின் றனர். புதிய கல்விக் கொள்கை அரசு பள்ளிகள், கல்லூரி கள், அரசு கல்வி நிறுவனங் களை அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கல்வி சேவையிலிருந்து அரசை ஒதுக்கி வைக்கும் இந்த கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு முழுமை யாக எதிர்க்கிறது. தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக, மாநில கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு உருவாக்கிக் கொண்டு இருக்கிறது. இந்த சூழ்நிலையில், மாநில அரசின் கொள்கை முடிவுக்கு எதிராகவும், மாணவர் - ஆசிரியர் நல னுக்கு மாறாகவும் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இதனை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் கல்லூரி அருகே ஆர்ப்பாட் டம் நடத்தினர்.
அப்போது செய்தியா ளர்களிடம் பேசிய சங்கத் தின் மாநிலத் தலைவர் ஜி.அரவிந்த்சாமி, “கல்வி என்பது மனித குலத்திற்கு பயன்படும் போதே பயன் பெறுகிறது - எனும் கொள் கையை பின்பற்றும் குரு நானக் கல்லூரி, கல்வியில் வணிகமயத்தையும், காவி சிந்தனையை திணிக்கும், கல்வியை முற்றிலுமாக மத்தியத்துவப்படுத்தும் தேசிய கல்விக் கொள்கை குறித்து கருத்தரங்கம் நடத்துவது முரணாக உள்ளது” என்றார். “இந்த மாநாடு நடை பெறுவது உயர்கல்வி துறைக்கு தெரியுமா? அல்லது ஆளுநரின் தூண்டு தலால் நடத்தப்படுகிறதா? பல்கலைக் கழகங்களில் பட்டமளிக்க நேரம் ஒதுக்க முடியாத ஆளுநருக்கு இதற் கெல்லாம் நேரம் இருக்கி றதா?” என்று கேள்வி எழுப்பி னார். “ஆர்எஸ்எஸ், சனாதன கருத்துக்களை பரப்புவ தற்காக வலம் வந்து கொண்டிருக்கும் ஆளுநரின் நடவடிக்கைகளை கண்டிப்ப தோடு, இத்தகைய நட வடிக்கைகளை மாநில அரசு தடுக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார். ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலச் செயற்குழு உறுப்பி னர் ப.க.புகழ்ச்செல்வி தலைமை தாங்கினார். தென்சென்னை மாவட்டச் செயலாளர் இரா.பாரதி, குரு நானக் கல்லூரி கிளைச் செயலாளர் கமலேஷ் உள்ளி ட்டோர் பேசினர்.