வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக தொடர் முழக்கம்
வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி, நாகப்பட்டினம் அவுரித்திடலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளர் வி. மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். மாநிலக்குழு உறுப்பினர் வி.பி. நாகை மாலி எம்எல்ஏ, நாகை மாவட்ட ஜமாத் உலமா சபை தலைவர் மௌலவி என். நசீர் கான் நூரி, திருப்பூண்டி முஸ்லிம் ஜமாத் நிர்வாக சபை தலைவர் ஜெ. முகமது ஷரீப், திருப்பூண்டி முஸ்லிம் ஜமாத் நிர்வாக சபை செயலாளர் என். முகமது இப்ராகிம், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் ஒ.எஸ். இப்ராஹிம், மனிதநேய ஜனநாயக கட்சி மாநில துணைச் செயலாளர் ஜெ.சாகுல் ஹமீது, மாவட்டச் செயலாளர் எச். யூசுப்தீன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.