tamilnadu

img

தேசம் காக்கும் செங்கொடி!

இடதுசாரிகளின் வலிமையைப்  பொறுத்தே இந்திய அரசியலின் திசை வழி  தீர்மானிக்கப்படும். வலதுசாரிகளின் வல்லாதிக்கத்தால்,  இந்திய மக்கள் அனைவரது வாழ்வும் சின்னாபின்னமாக சிதைக்கப்பட்டு  வருகிற நிலையில்,  நாடாளுமன்றத்தில்  இடதுசாரிகளின்  எண்ணிக்கையை  அதிகரிப்பது அவசியமாகிறது.  காலத்தின் குரலாகவும்,  களப்பணியின் நாயகர்களாகவும்  செயல்பட்டு வருகிற கம்யூனிஸ்ட்டுகள்  சட்டங்களை உருவாக்குகிற மன்றங்களில்  கணிசமாக இருப்பதன் மூலமே  தேசத்தைப் பாதுகாக்க முடியும். 

பாஜக 
கூட்டணிக் 
கட்சிகளை 
வீழ்த்துவோம்! 

சிபிஎம், இடதுசாரிக் கட்சிகளின் பலத்தை அதிகரிப்போம்! 

மதச்சார்பற்ற மாற்று அரசு அமைவதை உறுதி செய்வோம்!

தேர்தலின் முதல் கட்டமான ஏப்ரல் 19ம் தேதி, தமிழகமும், புதுவையும் தேசத்தின் திசைவழியைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்காற்றப் போகின்றன. 

கடந்த 10 ஆண்டு பாஜக ஆட்சியின் வேதனைகளை எண்ணிப் பார்த்து,  தமிழகத்தை அவர்கள் தொடர்ந்து வஞ்சித்த வரலாற்றை நெஞ்சில் நிறுத்தி, மாற்றத்தை ஏற்படுத்த இந்தத் தேர்தலைப்  பயன்படுத்திட  வேண்டும்.

மாநிலங்களுக்கு அதிக அதிகாரம்  மற்றும் நிதி ஆதாரம்

நிலச் சீர்திருத்தத்தை அமல்படுத்தி  நிலமற்றோருக்கு  நில விநியோகம்.

தனியார் துறையில் இட ஒதுக்கீட்டை கொண்டு  வருதல்

சாதி வாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்துதல்

ஜனநாயகம், கருத்துரிமை, மதச் சார்பின்மை,  கூட்டாட்சி மீட்போம்! 

பெண் தொழிலாளர்களுக்கு சமவேலைக்கு  சம ஊதியம்  வழங்குதல்.

தொழிலாளர் நல சட்டங்களை பலப்படுத்துதல்  சிறு- குறு  நடுத்தர தொழில்கள் பாதுகாப்பு

அனைத்து  விவசாயக் கடன்களையும்  ரத்து செய்வது

ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் 2016ஐ முழுமையாக அமல்படுத்தல்

வருகிற சில வாரங்களில் 18வது நாடாளுமன்றத் தேர்தலை நாடு சந்திக்க உள்ளது. தேசத்தை இருண்ட காலம் நோக்கி அழைத்து செல்லும் பா.ஜ.க.மற்றும் அதன் கூட்டணியைத் தோற்கடித்து, மதச்சார்பற்ற மாற்று அரசாங்கத்தை  ஆட்சியில் அமர வைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி சூளுரைத்துள்ளது.

கிடப்பில் போடப்பட்ட சேது சமுத்திரத் திட்டத்தை அமல்படுத்துவோம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்தல்

தமிழக வளர்ச்சிக்கான ரயில் திட்டங்களை கொண்டு வருதல்

தமிழ் மொழியை ஆட்சி மொழியாக ஆக்குதல்

கல்விக்கு     ஜிடிபியில்          6 சதவீத                 ஒதுக்கீடு

விகிதாச்சார பிரதிநிதித்துவம்    உள்ளிட்ட தேர்தல்                           சீர்திருத்தங்களை                        அமலாக்குதல்.

33 சதவிகித இடஒதுக்கீட்டை               நடைமுறைப்படுத்த      உகந்த  நடவடிக்கை         எடுத்தல்

கார்ப்பரேட்டுகளின்  வாரா கடன் பட்டியலை  வெளியிட்டு வசூலித்தல்.

விவசாய   தொழிலாளிகளுக்கு   தனித்துறை  உருவாக்கம்.

ஊடக சுதந்திரத்தை மீட்டெடுத்தல்

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ரத்து

தமிழக மீனவர்களை பாதுகாக்க நிரந்தர நடவடிக்கை எடுத்தல்

பழைய பென்சன் திட்டத்தைக் கொண்டு வருதல்

வேலை  செய்யும் உரிமையை அடிப்படை உரிமை ஆக்குவோம்!

திருநர்களுக்கு ஒரு சதவிகிதம் கிடைமட்ட இடஒதுக்கீடு

கார்ப்பரேட்டுகள்  மகா கோடீஸ்வரர்கள்  மீது கூடுதல் வரி விதிப்பு

தேர்தல் பத்திர ஊழலில் ஈடுபட்டோர் மீது உறுதியான நடவடிக்கை.

தமிழகத்தில் 2021 சட்டப்பேரவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பல்வேறு மதச்சார்பற்ற கட்சிகளும் இடம்பெற்ற திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெற்று, திமுக ஆட்சியில் அமர்ந்தது. பாஜகவின் மதவாதம் மற்றும் எதேச்சாதிகார நடவடிக்கைகளுக்கு எதிராகவும், மாநில உரிமைகள், மொழிப் பாதுகாப்பு, நிதிப் பகிர்வு அதிகரிப்பு போன்றவற்றிற்காகவும் திமுக அரசாங்கம் உறுதியான நிலைபாட்டை எடுத்து வருகிறது. மகளிருக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை உள்ளிட்ட, சட்டப்பேரவை தேர்தலில் அளித்த வாக்குறுதிகளில் பலவற்றை நிறைவேற்றி வருகிறது. 

தமிழ்நாடு ஆளுநர் அரசியல் அமைப்பு சட்டத்திற்கும், கூட்டாட்சி கோட்பாட்டிற்கும் விரோதமாக செயல்பட்டு வருகிறார். நீட் தேர்வு விலக்கு உள்ளிட்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு ஒப்புதல் தரமால் இழுத்தடிப்பது, தமிழகத்தின் பாரம்பரியமான தலைவர்களை அவமரியாதை செய்வது, அவதூறு பேச்சுக்களை பேசுவது, ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் கோட்பாடுகளை பரப்புவது, அரசிற்கு எதிராக போட்டி அரசாங்கம் நடத்துவது உள்ளிட்டு ஒன்றிய பாஜக அரசின் தூண்டுதலின் பேரிலேயே தொடர்ந்து தமிழகத்திற்கு விரோதமான போக்கை கடைபிடித்து வருகிறார். 

2011-2021 ஆட்சி அதிகாரத்திலிருந்து தற்போது எதிர்கட்சியாக செயல்படும் அதிமுக மாநில உரிமைகளையும், மக்கள் நலன்களையும் காவு கொடுத்து, ஒன்றிய ஆட்சியாளர்களிடம் சரணாகதி அடைந்து கிடந்தது. விவசாயி விரோத வேளாண் சட்டங்கள்,  குடியுரிமை திருத்த சட்டம், தொழிலாளர் உரிமை தொழிற்சங்க உரிமையை சீர்குலைக்கும் சட்டத் தொகுப்புகள், தேர்தல் பத்திர திட்டம் போன்ற அனைத்தையும் ஆதரித்தது மட்டுமல்ல, பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்து வந்த பிறகு கூட  அவை தவறு எனக் கூறுவதற்கு முன் வரவில்லை. 

ஊழல் சாம்ராஜ்யத்தைப் பாதுகாக்கும், ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை ஆதரித்து வரும் அதிமுக - தேமுதிக மற்றும் பாஜக - பாமக சந்தர்ப்பவாத கூட்டணிகளை முறியடித்து, மத்தியில் மதச்சார்பற்ற அரசாங்கத்தை நிறுவி,  இந்திய ஒருமைப்பாட்டைக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். இந்த உயரிய நோக்கோடும், தமிழக நலன் காக்கவும், திமுக, இடதுசாரிகள், மதச்சார்பற்ற கட்சிகள் இணைந்து உருவாக்கிய  மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி கம்பீரமாகத் தொடர்கிறது. நாடாளுமன்ற தேர்தல் களத்தில் மக்களின் ஆதரவு கோரி வருகிறது.

மதுரை, திண்டுக்கல் தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஏனைய தொகுதிகளில் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்கள் அனைவரையும்  பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.'

18 வது நாடாளுமன்றத் தேர்தல் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வந்து போகிற சராசரி தேர்தல் அல்ல. தேசத்தின் எதிர்காலத்தை, அரசமைப்பு சட்டத்தின் அடிப்படை விழுமியங்களான ஜனநாயகம், மத சார்பின்மை, கூட்டாட்சி,  அறிவியல் கண்ணோட்டம் ஆகியவற்றின் தலைவிதியைத் தீர்மானிக்க கூடிய தேர்தல்.

மக்கள் நலன்  காக்க, தேசத்தின் நலம் காக்க மாற்றுத் திட்டத்தின் அடிப்படையில் அனைத்து முயற்சிகளும் எடுப்போம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக உறுதி கூறுகிறோம்.   தமிழகத்தில் இந்தியா கூட்டணியை வெற்றி பெற வைக்க அனைத்து வாக்காளர்களும் சிந்தித்து செயல்பட வேண்டும் என அறைகூவி அழைக்கிறோம்.