காங்கிரஸ் எம்.பி., கவுரவ் கோகோய்க்கு பாகிஸ்தானுடன் தொடர்பாம்!
அசாம் பாஜக முதலமைச்சர் சர்ச்சை பேச்சு
கவுகாத்தி பாஜக ஆளும் அசாம் மாநில முதலமைச்ச ராக இருப்பவர் ஹிமந்தா பிஸ்வா சர்மா. காங்கி ரஸ் கட்சியில் இருந்து ஓட்டம் பிடித்து பாஜகவில் இணைந்து முதலமைச்சரானவர். 2026ஆம் ஆண்டில் அசாம் மாநிலத்திற்கு சட்டமன்ற தேர்தல் நடை பெற உள்ள நிலையில், முதல மைச்சர் வேட்பாளராக மீண்டும் களமிறங்கும் ஆசையில் வகுப்பு வாத பிரச்சனையை மாநிலம் முழுவதும் கட்டவிழ்த்து வரு கிறார். இதனால் அசாம் மாநி லத்தில் அடிக்கடி மத வன்முறை கள் நிகழ்கின்றன. இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எம்.பி.,யுமான கவுரவ் கோகோய்க்கு பாகிஸ்தானுடன் தொடர்பு இருப்பதாக புரளி யை கிளப்பியுள்ளார் ஹிமந்தா பிஸ்வா சர்மா. இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “கவுரவ் கோகோய் ஐஎஸ்ஐ யின் (பாகிஸ்தான் உளவு அமைப்பு) அழைப்பின் பேரில் பாகிஸ்தான் சென்றார். இதை நான் முதல் முறையாக சொல்கி றேன். எங்களிடம் இதற்கான ஆவணங்கள் உள்ளன. அவர் சுற்றுலாவுக்காக அங்கு செல்ல வில்லை. பயிற்சி பெறுவதற்கா கவே சென்றார். பாகிஸ்தான் நாட் டின் அதிகாரிகளுடன் நெருக்க மாக பணியாற்றினார். செப்டம் பர் 10ஆம் தேதி சரியான சரி பார்ப்புக்குப் பிறகு ஒவ்வொரு ஆதாரமும் பொது மக்களுக்கு முன் வைக்கப்படும்” என சர்ச் சைக்குரிய வகையில் கூறி யுள்ளார்.
கேரள சட்டமன்ற தேர்தலுக்காக சசி தரூரை வளைக்கிறதா பாஜக? அப்செட்டில் கேரள காங்கிரஸ் கமிட்டி
கடந்த ஒன்றரை ஆண்டுகளாவே காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் எம்.பி.,யுமான சசி தரூர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும், பாஜகவுக்கு லேசான அளவில் ஆதரவாகவும் பேசி வருகிறார். குறிப் பாக 8 மாதங்களுக்கு முன்,”என் மீது நம்பிக்கை இருந் தால் காங்கிரஸ் என்னை பயன்படுத்திக்கொள்ளட்டும்” என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் பட்டியலில் இல்லாத சசி தரூரை மோடி அரசு வெளிநாட்டிற்கு அனுப்புகிறது. ஆனால் எனது கட்சியின் தலைமை ஒப்புதல் இல்லாமல் நான் வெளிநாட்டிற்கு செயல் மாட்டேன் என சசி தரூர் கூறவில்லை. அமைதியாக உள்ளார். இதனால் 2026ஆம் ஆண்டுக்கான கேரள சட்டமன்ற தேர்தலுக்கு சசி தரூரை பாஜக வளைக்கி றதா என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். சசி தரூரின் செயல்பட் டால் கேரள காங்கிரஸ் கமிட்டி அப்செட்டில் உள்ள தாக செய்திகள் வெளியாகியுள்ளன.
புரளியா? சமாளிப்பு வேலையா?
“ஆபரேசன் சிந்தூர்” தாக்குதலை உலகநாடுகளுக்கு எடுத்து ரைக்க மோடி அரசு 7 குழுக்களை அமைத்துள்ளது. இந்த 7 குழுக்களில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆனந்த் சர்மா, எம்.பி.க்கள் கவுரவ் கோகோய், சையத் நசீர் உசேன் மற்றும் ராஜா பிரார் ஆகியோரில் யாரையாவது சேர்த்துக் கொள்ளுங்கள் என்ற பட்டியலை காங்கிரஸ் கட்சி ஒன்றிய அரசிடம் அளித்தது. ஆனால் ஒன்றிய அரசோ காங்கி ரஸ் கட்சி அளித்த பட்டியலை புறக்க ணித்து, திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி., சசி தரூர், அமர் சிங், மணீஷ் திவாரி ஆகியோரை குழுவில் சேர்த்துள்ளது. குறிப்பாக சசி தரூர் 5ஆவது குழுவின் தலைவராகவும் நிய மிக்கப்பட்டுளார். இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. குறிப் பாக காங்கிரஸ் உட்கட்சி பரிந்துரை விவ காரத்தில் கூட பிரதமர் மோடி தலைமை யிலான ஒன்றிய அமைச்சரவை மூக்கை நுழைப்பது நல்லதல்ல என காங்கிரஸ் கட்சி எச்சரிக்கை விடுத்தது. இந்த விசயத்தை மூடி மறைக்கவும் சமாளிக்கவுமே,”காங்கிரஸ் அளித்த பரிந்துரை பட்டியலில் உள்ள கவு ரவ் கோகோய் பாகிஸ்தானுடன் தொடர்புடையவர்” என அசாம் பாஜக முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா வை கூற வைத்து பிரச்சனையை திசை திருப்பியுள்ளது பாஜக, என தகவல்கள் வெளியாகியுள்ளன.