தோழர் கந்தசாமி காலமானார்
திருச்சிராப்பள்ளி, மே 23- திருச்சிராப்பள்ளி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் நெய்குளம் கிராமம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர், கிளை செயலாளர் தொமுக்கு கந்தசாமி வியாழன் மாலையில் காலமானார். 35 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சி உறுப்பினராக அஇவிதொச தாலுகா, ஒன்றிய நிர்வாகியாக செயல்பட்டவர் தோழர் கந்தசாமி. நெய்க்குளம் கிராமத்தில் ஆதிக்க சக்திகளின் அடக்குமுறைக்கு எதிராக போராடியவர். இதன் காரணமாக போலீஸ் அடக்குமுறை, நீதிமன்ற காவல் என பல்வேறு வழக்குகளை சந்தித்து பட்டியல் இன மக்கள் உரிமைக்காக போராடியவர் தோழர் கந்தசாமி. அவரது மறைவுக்கு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் மாநில பொருளாளர் அ. பழநிசாமி, சிபிஐஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சந்திரன், அ.மல்லிகா, ஆர்.முத்துகுமார், டி. ரஜினிகாந்த், சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டச் செயலாளர் அலெக்ஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஜீ.செல்லத்துரை, சி. குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.