tamilnadu

பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு நிறைவு

சென்னை,அக்.24- தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2021-22 பொதுக்  கலந்தாய்வின் நான்கு சுற்று முடிவில் 89,187 இடங்கள் நிரப்பப்பட்டன. இந்நிலையில் நிரப்பபடாமல் உள்ள பொது, தொழிற்கல்வி மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத சிறப்பு உள் ஒதுக்கீட்டிற்கான இடங்களுக்கு, பொதுக் கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாத தகுதி வாய்ந்த மாணவர்கள் மற்றும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று  தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்தது. அதைத்தொடர்ந்து பொறியியல் படிப்பு களுக்கான துணை கலந்தாய்விற்கு மொத்தம் 9,463 பேர் விண்ணப்பப் பதிவு செய்தனர். அவர்களில் பதிவு கட்டணம் செலுத்திய 9,113 மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்தநிலையில் பொறியியல் படிப்பு களுக்கான துணை கலந்தாய்வு நிறை வடைந்து, மொத்தம் 95,069 மாணவர்களுக்கு சேர்க்கைக்கான இறுதி ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.  2021-22ம் கல்வி ஆண்டிற்கான இளங்கலை கட்டிடகலை படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு அக்டோபர் 25 ஆம் தேதி) தரவரிசை பட்டியல் வெளி யிடப்படும் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. 

;