tamilnadu

தடகள வீராங்கனையிடம் பாலின சான்று கேட்ட காவலர் மீது புகார்

சென்னை,பிப்.28- பிரபல தடகள வீராங்கனை சாந்தி சவுந்தரராஜனிடம் பாலின சான்றிதழ் கேட்ட காவல் துறை  அலுவலர் மீது புகார் அளிக்கப் பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள  வீராங்கனை சாந்தி சவுந்தரராஜன். இவர் தேசிய அளவில் 11 பதக்கங் களை இந்தியாவிற்காக பெற்றுள் ளார். மேலும், தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணை யத்தின் தலைமை பயிற்சியா ளராகவும் இருந்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நிர்வா கிகளால் சாந்தி சவுந்தரராஜன் சாதி மற்றும் பாலின பாகுபாடு அடிப்படையில் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டார். இது தொடர்பாக தேசிய பட்டியல் சாதி  ஆணையத்தின் உதவியுடன் வேப்பேரி காவல் உதவி ஆணையர் அலுவலகத்தில் சாந்தி  சவுந்தர்ராஜன் புகார் அளித்தார்.  காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து, சில தினங்க ளுக்கு முன்பு, சாந்தி சவுந்தரரா ஜன் விசாரணைக்கு ஆஜரானார். அப்போது வேப்பேரி காவல் உதவி ஆணையர் ஹரிகுமார், பெண் என்பதற்கான சான்றிதழ் நீங்கள் வழங்க வேண்டும் என  கேட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்டிக்கும் வகையில் தேசிய திருநங்கை களுக்கான தென் மண்டல கவுன் சில் பிரதிநிதியான மதுரையைச் சேர்ந்த கோபி சங்கர் வெளி யிட்டுள்ள அறிக்கையில், “சட்டத் தைக் காக்கும் காவல் துறையே சட்டத்தை மீறி நடப்பது வெட்கக் கேடானது.  உச்சநீதிமன்றம் ஒவ்வொரு நபரும் தங்கள் பாலினத்தை சுய மாக அடையாளம் காண உரிமை யுண்டு எனவும், பாலின அடையா ளத்தை வெளிப்படையாக கேள்வி கேட்க காவல் துறை அல்லது  நீதிமன்றத்துக்கு உரிமை இல்லை எனவும் தெரிவித்துள்ளது. வேப்பேரி காவல் உதவி ஆணையர் ஹரிகுமாரின் கேள்வி  குறித்து காவல் துறை உயர் அலு வலர்களிடம் புகார் அளிக்கப் பட்டுள்ளது. காவலர் மீது உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.