திருவனந்தபுரம், ஜுலை 14- திருவனந்தபுரம் பல்கலைக்கழக கல்லூரி யில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து அந்த கல்லூரியில் செயல்பட்டு வந்த எஸ்எப்ஐ கிளை கலைக்கப் படுவதாக எஸ்எப்ஐ கேரள மாநிலக்குழு அறி வித்துள்ளது. அகில் சந்திரன் என்கிற மாணவர் கத்தி யால் குத்தப்பட்ட சம்பவத்தில் தொடர்பு டைய ஏ.என்.நசீம், சிவரஞ்சித், முகமது இப்ராகிம், அத்வைத் மணிகண்டன், அமர், ஆரோமல் ஆகிய மாணவர்கள் எஸ்எப்ஐ யின் அடிப்படை உறுப்பினர் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பொறுப்பு களிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக கல்லூரியில் அண்மை யில் நடந்த சம்பவம் கெடுநிகழ்வு எனவும் அத்தகைய தாக்குதல்கள் எந்த ஒரு கல்வி வளாகத்திலும் நிகழக்கூடாது எனவும் எஸ்எப்ஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்க லைக்கழக கல்லூரியில் தவறான நட வடிக்கைகளை உரிய முறையில் எதிர் கொள்ளவில்லை. மாணவர்களால் ஏற்கத் தக்க செயல்களை கல்லூரியில் உள்ள எஸ்எப்ஐ கிளையால் மேற்கொள்ள முடிய வில்லை. எனவே திருவனந்தபுரம் பல்க லைக்கழக கல்லூரி எஸ்எப்ஐ கிளை கலைக்கப்பட்டுள்ளது என மாநில தலை வர் பி.ஏ.வினீஷ், செயலாளர் கே.எம்.சச்சின் தேவ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.