சென்னை, நவ. 16 - கல்லூரி ஆசிரியர்களின் மாற்றுப்பணி ரத்து செய்யப்படும் என்று கல்லூரிக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார். ஒரு கல்லூரியில் உள்ள ஆசிரியர்கள் மாற்றுப்பணி யாக புதிய கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டனர். ஒரு வரு டத்திற்கு மாற்றுப்பணி ரத்து செய்யப்பட்டு, பழையபடி திரும்ப அழைத்துக் கொள் ளப்படுவார்கள் என்று கூறப் பட்டது. இதன்படி 2 முதல் 6 ஆண்டுகள் வரை மாற்றுப் பணியில் ஏராளமான ஆசிரியர்கள் பணியாற்றி வரு கின்றனர். எனவே, மாற்றுப்பணியை ரத்து செய்யக் கோரி வெள்ளியன்று (நவ.15) சென்னை சைதாப் பேட்டையில் உள்ள கல்லூரிக் கல்வி இயக்குநரிடம் மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகம் நடத்தியது. மாநிலத் தலைவர் பி.டேவிட் லிவிங்ஸ்டன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், பொதுச்செயலாளர் சோ .சுரேஷ், பொருளாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் பேசினர். இதனைத் தொடர்ந்து கல்லூரிக் கல்வி இயக்குநர் சுந்தரவள்ளி, சங்கத் தலைவர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், நவ.25ந் தேதிக்குள் அனைத்து மாற்றுப் பணிகளையும் ரத்து செய்வதாக உறுதி அளித்தார்.