மதுரை, மார்ச்.19- மதுரை அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த சச்சின் சிவி (எ) சி. சிவக்குமார் வங்கதேசத்தில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போட்டிக்கு தேர்வாகி உள்ளார். வங்கதேசத்திற்கு செல்ல பயணச்செலவு, விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பயிற்சி முகா மில் கலந்து கொள்வதற்காகவும் நிதியுதவி வேண்டி மாவட்ட ஆட்சி யரிடம் கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில், வெள்ளியன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ்சேகர், தன் விருப்புரிமை நிதியிலிருந்து சி.சிவக்குமாருக்கு நிதி உதவியாக ரூ.25 ஆயிரத்திற் கான காசோலையை வழங்கினார். மேலும் சிவக்குமார் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.