தேனி ,ஜூன்.20- கூடுதல் விலை கேட்டு தேவதானப்பட்டியில் தென்னை விவசாயிகள் தேங்காயை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தேங்காய் விலை வீழ்ச்சியால் தென்னை விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து வருகிறார்கள் .தேங்காய் கிலோ ஒன்றுக்கு ரூ 50 வழங்க வேண்டும் .கொப்பரை கிலோ விற்கு ரூ 150 வழங்க வேண்டும் என வலியுறுத்தி தென்னை விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தேங்காய் உடைப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்கத்தின் பெரியகுளம் தாலுகா பொருளாளர் பி.வீறு தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் கே.ராஜப்பன் போராட் டத்தை துவக்கி வைத்தார் .மாவட்ட செயலாளர் டி.கண்ணன், தாலுகா செயலாளர் எம்.வி.முருகன் ,எஸ். போஸ்.பி.இளங்கோவன் உள்ளிட்ட 60 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு தேங்காயை சாலையில் போட்டு உடைத்தனர் .மாநில தலைவர் விஜயமுருகன் போராட்டத்தை நிறைவு செய்து பேசினார்.