tamilnadu

img

தமிழ்நாடு வங்கியை உருவாக்க கோரி கூட்டுறவு வங்கி ஊழியர்கள் தர்ணா

சென்னை, ஜன. 5 – தமிழ்நாடு வங்கியை உருவாக்க கோரி வெள்ளி யன்று (ஜன.5) மாநிலம் முழு வதும் மாவட்ட மத்திய கூட்டு றவு வங்கிகள் முன்பு ஊழி யர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழி யர்களுக்கும் 20 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், மாநிலத்தில் உள்ள 23 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி மற்றும் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியை இணைத்து ‘தமிழ்நாடு வங்கி’யை உருவாக்க வேண்டும் மாநில அரசின் அனைத்து பொதுத்துறை ஊழியர்களுக்கு 20 விழுக் காடு போனஸ் வழங்கப் பட்டது. கூட்டுறவு ஊழியர்க ளுக்கு 10 விழுக்காடு மட்டுமே வழங்கப்பட்டுள் ளது. எஞ்சிய 10 விழுக்காடு போனஸ் தொகையை வழங்க வேண்டும், ஊழியர் கடன்களுக்கு ஏ்ற்கெனவே  பெற்று வந்த வட்டி விகிதம் உயர்த்தியதை கைவிட வேண்டும், ஊதிய உயர்வு நிலுவைத் தொகை வழங்குதலுக்கு மேலாண்மை இயக்குநர் உள்ளிட்டோருக்கு வழங்கப் பட்டுள்ள அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டும், ஊழி யர்கள் பெற்றுவரும் உரிமை கள், சலுகைகள் தொடர் வதை, ஊதிய உயர்வு சுற்ற றிக்கையில் உறுதி செய்ய  வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில் தர்ணா நடை பெற்றது. இதன் ஒரு பகுதியாக சென்னை மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம் சார்பில் பிராட்வேயில் உள்ள தலைமையகம் முன்பு தர்ணா நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் எம்.ராஜ கேசி தலைமையில் நடை பெற்ற போராட்டத் தில், சம்மேளன தலைவர் தி.தமிழரசு, பொதுச் செய லாளர் இ.சர்வேசன், சங்கத்தின் பொதுச் செயலா ளர் கே.கோவிந்தராஜூ, பெபி பொதுச்செயலாளர் டி.ரவிக் குமார், துணை தலைவர் ராஜ கோபால் உள்ளிட்டோர் பேசினர்.