tamilnadu

img

சிவகாசியில் பட்டாசு ஆலைகள் மூடல்....

விருதுநகர்:
முழு முடக்கம் காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பட்டாசு ஆலைகளும் திங்கள்கிழமை மூடப்பட்டுள்ளன. கொரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு மே 10-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை பொது முடக்கம் அறிவித்துள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் ஆலைகள்ஐம்பது சதவீத தொழிலா ளர்களை வைத்து செயல்படலாம் என அரசு அறிவித்துள் ளது. 

ஆனால், வைரஸ் பரவலைத் தடுக்க பட்டாசு ஆலைகளை மூட வேண்டும்என தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தி யாளர் சங்கத்தை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியிருந்தார். இதைத்தொடர்ந்து  மாவட்டத்திலுள்ள 1,070 பட்டாசு ஆலைகளை மே 10-ஆம் தேதி முதல் 24-ஆம்தேதி வரை மூடுவதாக தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க நிர்வாகம் தெரிவித்தது. இதன்படி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பட்டாசு ஆலைகளும் ஏப்ரல் 10-ஆம் தேதி மூடப்பட்டன. மறு உத்தரவு வரும்வரை பட்டாசு ஆலைகள் மூடப்பட்டு இருக்கும் என ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

;