மதவெறியர்களின் அதிகாரம் என்னவெல்லாம் செய்யும்?
அதிகாரம் என்னவெல்லாம் செய்யும் என்பதற்கான உதராணம், சென்னை உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமணி மீதான வழக்கு. இவர் மகாரா ஷ்டிரா நீதிமன்றத்தில் இருந்தபோது பில்கிஸ் பானு வழக்கில் தப்பித்த இருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியவர். சென்னையில் இவர் மீது சங்பரிவார் அமைப்பினர் சில குற்றச்சாட்டு கள் கூறினர். அதன் பேரில் சி.பி.ஐ நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகோய் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, ரஞ்சன் கோகோய் தலைமையிலான கொலிஜியம், நீதிபதி தஹில் ரமணியை சென்னையிலிருந்து மேகாலயா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மாற்ற பரிந்துரைத்தது. கொலிஜியத்தின் முடிவை மறுபரிசீலனை செய்ய அவர் கோரிக்கை விடுத்தார். அவர் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தையடுத்து, அவர் தலைமை நீதிபதி பொறுப்பை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் தஹில் ரமணி எந்தவிதமான குற்றச்செயல்களிலும் ஈடுபடவில்லை; அவர் மீது எந்த குற்றமும் பதிவு செய்யப்படவில்லை என்கிற தகவல் நாடாளு மன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் பதவியில் நீடித்திருந்தால் உச்சநீதிமன்ற நீதிபதி ஆகியிருப்பார்.
தமிழ்நாட்டில் கடந்த 2 மாதங்களாக தலைமை நீதிபதி இல்லை. பொறுப்பு நீதிபதி தான் இருக்கிறார். இங்கு தலைமை நீதிபதியாக வர வேண்டியவர் நீதிபதி எஸ்.முரளிதர். ஒடிசா வில் இருக்கிறார். இவர்தான் சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி என உச்சநீதிமன்ற கொலிஜியம் தேர்வு செய்தது. ஆனால் தில்லியில் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல்கள் நடந்தபோது காவல்துறை வேடிக்கை பார்த்தது. தாக்கியவர்களுக்கு பாதுகாப்பு அளித்தது. காயம் பட்டவர்களை எடுத்துச் செல்ல ஆம்புல ன்ஸ் அனுமதிக்கப்படவில்லை. அந்த நேரத்தில் நீதிமன்றத்துக்கு வந்த நீதிபதி எஸ்.முரளிதர் ஆம்புலன்ஸ்களை அனுமதிக்கவும், மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் உத்தர விட்டார். தற்போது நீதிபதி எஸ்.முரளிதரை பழிவாங்கும் வகையில் சென்னையில் பொறுப்பேற்க அனுமதிக்கவில்லை. நீதிபதி கே.என்.ஜோசப் உச்சநீதிமன்ற நீதிபதியாக உள்ளார். இந்த பொறுப்புக்கு 2018 ஆம் ஆண்டே இவரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு அந்த பொறுப்பு வழங்கப்பட்டிருந்தால் 2 ஆண்டுகள் மற்றும் 8 மாதங்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றும் வாய்ப்பை பெற்றி ருப்பார். இதற்கு முன்பு தலைமை நீதிபதியாக இருந்து யு.யு.லலித் வெறும் 74 நாட்கள் மட்டுமே தலைமை நீதிபதியாக இருந்தார். இப்போது நடப்பது எதுவும் சாதாரண மனிதர்களைப்பற்றியது அல்ல. ஸ்டேன் சுவாமி 84 வயதுக்காரர். கை நடுங்கும். அவர் ஒன்றும் துப்பாக்கி பிடிப்பவர் அல்ல. ஆனால், ஆட்சியாளர்கள் விரும்பியபடி சிறைவைக்கப்பட்டார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் பேசியதிலிருந்து ...
நாகர்கோவில், டிச.18- அடுத்த மாதம் குமரி மாவட்டத்தில் நடைபெற விருக்கும் ‘தோள்சீலைப் போராட்டத்தின் 200 ஆண்டு’ நிறைவு விழா மாநாட்டில் தமிழக, கேரள முதல்வர்கள் பங்கேற்பதாக தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தெரிவித்தார். நாகர்கோவிலில் தோள்சீலைப் போராட்டத்தின் 200 ஆண்டு நிறைவு கருத்தரங்கம் ஞாயிறன்று (டிச.18) நடைபெற்றது. முன்னாள் நாடாளுமன்ற உறு ப்பினர் ஏ.வி.பெல்லார்மின் தலைமை வகித்தார். இதில் பங்கேற்று அமைச்சர் மேலும் பேசியதாவது: அடுத்த மாதம் தமிழக, கேரள முதல்வர்களை அழைத்து தோள்சீலைப் போராட்டத்தின் நிறைவை கொண்டாட இருக்கிறோம். என்னிடம் சிலர் அணுகி இது முடிந்தபோன கதை; இதைப்பற்றி இப்போது நாம் ஏன் பேச வேண்டும்; இப்போது அனைத்து சமூகமும் நன்றாகத்தானே உள்ளது என்றார்கள். அவர்களுக்கு என்னிடம் ஒரு பதில் உள்ளது. எந்த சனாதனவாதிகள் அப்படிப்பட்ட சாதிய அடுக்குமுறையை- ஒடுக்குமுறையை இந்த மண்ணில் அரங்கேற்றினார்களோ, அவர்கள் பல்வேறு வடிவங்களை எடுத்து, அமைப்புகளாக மாறி நாங்கள் சனாதனத்தைக் கொண்டுவருவோம் என்று இன்றைக்கும் பேசி வருகின்றார்களே என்பதுதான் அந்த பதில்.
பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த மண்ணின் பூர்வகுடி மக்களாக இருந்த திராவிடர்கள், வந்தேறி குடியேறிய ஒரு பகுதியினரால் ஆக்கிர மிக்கப்பட்டு, வஞ்சிக்கப்பட்டு, ஏமாற்றப்பட்டுள்ளனர். தங்களது மதநம்பிக்கையாக அவற்றை ஏற்றுக் கொண்டு அடிமை வாழ்க்கையை நடத்தினர். அண்மைக்காலத்தில் ஆப்கானிஸ்தான் ஆட்சி யை தலிபான்கள் பிடித்தார்கள். ஒரே நாளில் அவர்களால் பெண்கள் வீட்டுக்கு வெளியே வரக் கூடாது என்று சொல்லி அதை நடைமுறைப்படுத்த முடிந்தது. பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது என்று உத்தரவிட்டு நிறுத்த முடிந்தது. பெண் மருத்துவர்களும் வீடுகளில் முடங்கினர். ஒரு பெண் ஒரு ஆணின் துணையுடன்தான் ஆண் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என்று கட்டளையிட்டனர். இதன் காரணமாக பெண்கள் மரணத்தில் உலகில் உச்சம் தொட்டது ஆப்கானிஸ்தான். ஒரு ஆதிக்க சக்தி அதிகாரத்தை தன்வயப்படுத்தி னால் எந்த அட்டூழியத்தையும் செய்துவிட முடியும் என்பதற்கு இதுபோன்ற பல ஆதாரங்கள் உலகின் பல பகுதிகளில் உள்ளன. அருட்பணி ஸ்டேன் எப்படி குற்றவாளி ஆக்கப்பட்டார், எப்படியெல்லாம் சித்ரவதைக்கு உள்ளாகி சிறையில் மரணமடைந்தார் என்பதை நாம் பார்த்தோம். சனாதனவாதிகள் எதையும் செய்வார்கள். சனாதனத்துக்கு எதிராக நாம் நடத்தும் மாநாட்டுக்கு எதிராக இப்போதே களமிறங்கிவிட்டார்கள். அன்று நடந்தது ஒரு குறிப்பிட்ட சாதிக்கான போராட்டம் அல்ல, சூத்திரர் என அவர்கள் வரையறுத்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும், மனிதப் பிறவிகளாககூட மதிக்காமல் பஞ்சமர் என வரையறுத்த தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களும் தோள்சீலைப் போராட்டத்தை நினைவுகூர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பீட்டர் அல்போன்ஸ்
தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலை வர் பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், “வாக்குரிமை மட்டும் இல்லாமல் போயிருந்தால் நம்மை யார் ஏறெடுத்து பார்த்திருப்பார்? இந்த நாட்டின் முதல் பிரதமர் நேரு அனைத்து குடிமக்களுக்கும் வாக்குரி மையை அறிவித்தார். திருவாங்கூர் மகாராஜா மக்களின் வாக்குகளால் ஆட்சிக்கு வரவில்லை. பரம்பரை பரம்பரையாக அதிகாரத்துக்கு வந்தார். ஆகவேதான் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் பற்றி அவர் அக்கறை காட்டவில்லை. வாக்குச் சீட்டு இருப்ப தால் ‘சேரி’ என ஒதுக்கப்பட்ட இடத்திற்கும் செல் கிறார்கள். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று கேட்டவர்கள் இன்று ‘தாய்மார்களே’ என்று கைகூப்புகிறார்கள் என்றால் அவர்களிடம் உள்ள வாக்குச் சீட்டுதான் காரணம். வரலாற்றை சொல்ல நினைக்கிறோம். எங்க ளுக்கு என்ன அவமானம் நடந்தது என்பதைக்கூற விரும்புகிறோம். எங்கள் குலப்பெண்கள் எவ்வளவு பெரிய அவலத்துக்கு தள்ளப்பட்டார்கள் என்பதை சொல்ல நினைக்கிறேம். தெரியாதவர்களுக்கு அதை தெரியவைப்பதன் மூலமாக நடந்துவிட்ட தவறுகள் மீண்டும் நடக்காமல் இருப்பதற்காக விழி ப்போடு இருக்க வேண்டும் என்கிற நோக்கத்தைத் தவிர வேறொன்றுமில்லை. மார்பு மறைக்கும் உரிமையைக்கூட மறுத்த அன்றைய அரசு 64 சனாதன தர்மங்களை கடைப்பிடித்ததாக புகழ்கிறார்கள். தமிழ்நாட்டின் ஆளுநர்தான் இதை முதல்முறையாக கூறுகிறார். அந்த சனாதனம் என்ன என்பதை சொல்வதற்குதான் இந்த மாநாடு நடத்த வேண்டும் என்று எண்ணுகிறோம்” என்றார்.
பாலபிரஜாபதி அடிகளார்
அய்யா வைகுண்டபதியின் தலைவர் பாலபிரஜாபதி அடிகளார் பேசுகையில், “வரலாற்றுச் சிறப்பு மிக்க தோள்சீலை உரிமைப் போராட்டத்தின் ஒரு பகுதியாக அய்யா வைகுண்டர் சிறைவைக்கப்பட்டார். தோளில் சீலை போடுவதற்கு போராட்டம் வேண்டுமா? ஆம். ஆடை மனிதனின் அடையாளம். மனிதனைத் தவிர வேறெந்த உயிரியும் ஆடை அணிவதில்லை. அதை அகற்று என்று சொன்னதல்லாமல் அதற்கு சமயத்தை தன்னோடு வைத்துக்கொண்டான். இரண்டு மாநிலங்களுக்கு ஆளுநராக இருக்கும் சகோதரி தமிழிசை, சங்கராச்சாரியாரை வணங்கச் செல்கிறார். அவருக்கு வழங்க வேண்டிய சால்வை பிடுங்கி எறியப்பட்டது. தீண்டாமை இன்னும் இருக்கிறது என்பதற்கு இதைவிட பெரிய அத்தாட்சி வேண்டுமா? எந்த மண்ணில் மனிதன் நடமாடக்கூட உரிமை மறுக்கப்பட்டதோ அங்கிருந்துதான் தீண்டாமைக் கொடுமைக்கு எதிரான போராட்டம் எழ வேண்டும்” என்றார்.