சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து எரிவாயு உருளையை பாடை ஏற்றி சிஐடியு போராட்டம்
திருப்பூர், ஏப்.16 - சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து சிஐடியு சார்பில், எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்து, பாடையில் ஏற்றி புதனன்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடை பெற்றது. ஒன்றிய மோடி அரசு, கடந்த வாரம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.50 உயர்த்தி மக்கள் மீது பொரு ளாதார யுத்தத்தைத் தொடுத்துள்ளது. இதை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எரி வாயு உருளைக்கு மாலை அணிவித்து, பாடை ஏற்றி கண்டன முழக்கங்கள் எழுப்பி னர். சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்க ராஜ், துணைத் தலைவர் கே.உண்ணிகிருஷ் ணன், சிஐடியு உழைக்கும் பெண்கள் மாவட்ட கன்வீனர் எல்லமாள், எல்ஐசி காப்பீட்டு முக வர்கள் சங்க நிர்வாகி வளர்மதி ஆகியோர் கண்டன உரையாற்றினர். சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.சம்பத், மாவட்டத் துணைத் தலை வர் பி,பாலன், சிஐடியு கட்டுமான தொழி லாளர் சம்மேளன மாநில பொதுச்செய லாளர் டி.குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வேலம்பாளையம்: அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், வேலம்பாளையம் கிளைகள் சார் பில் செவ்வாயன்று கலையரங்கம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வேலம்பாளையம் ஏ கிளைச் செயலாளர் எம்.பாண்டியராஜ் தலைமை வகித்தார். இதில், நகரச் செயலா ளர் ச.நந்தகோபால், நகரக்குழு உறுப்பினர் கள் அ.உமாநாத், என்.விஸ்வநாதன், புதுக் காலனி கிளைச் செயலாளர் சி.சுப்பிரமணி யம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். நக ரக் குழு உறுப்பினர் வி.ஆர்.சரவணகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.