தில்லி, மகாராஷ்டிரா அரசுகளைப் போல தமிழகத்திலும் பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும் சிஐடியு பெரம்பலூர் மாவட்ட மாநாடு வலியுறுத்தல்
பெரம்பலூர், ஜுன் 29- பெரம்பலூரில் துறைமங்கலம் சிஐடியு அலுவலகத்தில் 3+1 ஆட்டோ மற்றும் அனைத்து வகையான வாகன ஓட்டுநர்கள் சங்க மாவட்ட மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் பெரியசாமி, மாவட்ட துணைச் செயலாளர்கள் தீனதயாளன், பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொறுப்பாளர் பன்னீர்செல்வம் மாநாட்டு கொடியினை ஏற்றிவைத்தார். மாநில செயல் தலைவர் பாலசுப்ரமணியம் மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசினார். மாவட்டச் செயலாளர் ரெங்கநாதன் செயல் அறிக்கை வாசித்தார். மாவட்டப் பொருளாளர் சிவசங்கர் வரவு-செலவு அறிக்கை வாசித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் அகஸ்டின், மாவட்ட துணைத் தலைவர் கருணாநிதி ஆகியோர் பேசினர். ஆட்டோ சங்க சம்மேளன பொதுச் செயலாளர் சிவாஜி நிறைவுரையாற்றினார். தில்லி, மஹாராஷ்டிரா அரசுகளைப் போல தமிழகத்திலும் இருசக்கர வாகன பைக் டாக்சியை தடை செய்திட வேண்டும். ஆன்லைன் அபராதத்திலிருந்து ஆட்டோவுக்கு விலக்கு அளித்திடவேண்டும். பர்மிட் இன்றி கர்நாடகா பதிவெண்ணுடன் இயங்கும் மெட்ரோ பச்சை நிற ஆட்டோவை பொது சேவைக்கு அனுமதிக்க கூடாது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ஆட்டோ தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட துணைத் தலைவர் சந்திரகாசன் நன்றி கூறினார்.