tamilnadu

img

ஆவடி திண்ஊர்தி தொழிற்சாலையில் சிஐடியு கூட்டணி மகத்தான வெற்றி

ஆவடி திண்ஊர்தி தொழிற்சாலையில் 
சிஐடியு கூட்டணி மகத்தான வெற்றி

சென்னை அருகே உள்ள ஆவடி திண்ஊர்தி (டாங்கி) தொழிற்சாலை யில் சி.ஐ.டி.யு தலைமையிலான அணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. இந்த ஆலையில் 2025 - 2027ஆம் ஆண்டிற்கான ஆவடி திண்ஊர்தி (Heavy vechile factory employees union) தொழிலாளர்கள் சங்கத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்த லில் சிஐடியு - சோசலிஸ்ட் தொழிலா ளர் முன்னணி கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்த கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றது.  சிஐடியு சார்பில் போட்டியிட்ட ஆர்.முரளிகுமார் தலைவராகவும், பி.பாஸ்கர் ஜி.சரவணன் துணைதலை வர்களாகவும் என்.ஆர்.சீனிவாசன் எம்.வினாயகம் இணை செயலாளர் களாகவும், கே.எம்.அனிஷ், கே.கணே சன் அமைப்பு செயலாளர்களாகவும்,   வி.தினேஷ்குமார் உதவி பொருளாள ராகவும்  வெற்றி பெற்றுள்ளனர்.   நிர்வாககுழு உறுப்பினர்களாக சிஐடியு சார்பில் போட்டியிட்ட 14 பேர் வெற்றி பெற்றனர். சிஐடியு  மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்தி ரன், துணைத் தலைவர் சு பால்சாமி,  அமைப்பின் தலைவர் சத்தியநாரா யணன் ஆகியோர் வெற்றி பெற்ற வர்களை  பாராட்டி, வாழ்த்து தெரிவித்த னர்.